கண்ணதாசன்

தமிழ்க் கவிஞர்

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

கண்ணதாசன்
இந்திய அஞ்சல் தலையில் கண்ணதாசன்
இந்திய அஞ்சல் தலையில் கண்ணதாசன்
பிறப்புமுத்தையா
(1927-06-24)24 சூன் 1927
சிறுகூடல்பட்டி, காரைக்குடி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு17 அக்டோபர் 1981(1981-10-17) (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர்காரை முத்துப்புலவர்
வணங்காமுடி
கனகப்பிரியன்
பார்வதிநாதன்
ஆரோக்கியசாமி
தொழில்கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர்.
தேசியம்இந்தியர்
குடியுரிமை இந்தியா (1927-1981; இவரது மரணம்)
கல்வி8ஆவது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்அர்த்தமுள்ள இந்து மதம்
இயேசு காவியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1968 குழந்தைக்காக

சாகித்திய அகாதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்கள்பொன்னழகி (பொன்னம்மாள்)
(திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள்
பார்வதி (பார்வதியம்மாள்)
(திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள்
வள்ளியம்மை - 1976 முதல் 1981 வரை
துணைவர்3
பொன்னம்மாள்
பார்வதியம்மாள்
வள்ளியம்மை
பிள்ளைகள்15
கண்மணிசுப்பு
கலைவாணன்
மரு.இராமசாமி
வெங்கடாசலம்
அலமேலு
தேனம்மை
விசாலாட்சி
காந்தி
கமல்
அண்ணாதுரை
கோபி
சீனிவாசன்
ரேவதி
கலைச்செல்வி
விசாலி
பெற்றோர்சாத்தப்பச் செட்டியார்
விசாலாட்சி ஆச்சி
குடும்பத்தினர்உடன்பிறந்தோர் :- 1)கண்ணம்மை
2)ஞானாம்பாள்
3)முத்தாத்தாள்
4)காந்திமதி
5)கண்ணப்பன்
6)சிறீனிவாசன்
7)சொர்ணாம்பாள்
8)சிவகாமி

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர்.[8][9][10][11] அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.

மறைவு

உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[12] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.[13][14][15]

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்

கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

தயாரித்த படங்கள்

கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[16] அவை:

  1. சிவகங்கை சீமை
  2. கவலை இல்லாத மனிதன்
  3. கறுப்புபணம் (1964)
  4. வானம்பாடி
  5. மாலையிட்ட மங்கை (1958)
  6. ரத்தத்திலகம்

பாடலாசிரியர் பணி

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்

கவிதை நூல்கள்

காப்பியங்கள்

  1. ஆட்டனத்தி ஆதிமந்தி
  2. இயேசு காவியம்
  3. ஐங்குறுங்காப்பியம்
  4. கல்லக்குடி மகா காவியம்
  5. கிழவன் சேதுபதி
  6. பாண்டிமாதேவி
  7. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
  8. மலர்கள்
  9. மாங்கனி
  10. முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்

  1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
  5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
  6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
  7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
  8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
  9. பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்

  1. அம்பிகை அழகுதரிசனம்
  2. கிருஷ்ண அந்தாதி
  3. கிருஷ்ண கானம்
  4. கிருஷ்ண மணிமாலை
  5. கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ்
  6. ஸ்ரீகிருஷ்ண கவசம்
  7. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  8. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  9. தைப்பாவை

கவிதை நாடகம்

  1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

  1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
  2. பஜகோவிந்தம்

புதினங்கள்

  1. அதைவிட ரகசியம்
  2. அரங்கமும் அந்தரங்கமும்
  3. அவளுக்காக ஒரு பாடல்
  4. அவள் ஒரு இந்துப் பெண்
  5. ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
  6. ஆயிரங்கால் மண்டபம்
  7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
  8. ஊமையன்கோட்டை
  9. என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ்
  10. ஒரு கவிஞனின் கதை
  11. கடல் கொண்ட தென்னாடு
  12. காமினி காஞ்சனா
  13. சரசுவின் செளந்தர்ய லஹரி
  14. சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17
  15. சிங்காரி பார்த்த சென்னை
  16. சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
  17. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  18. தெய்வத் திருமணங்கள்
  19. நடந்த கதை
  20. பாரிமலைக்கொடி
  21. பிருந்தாவனம்
  22. மிசா
  23. முப்பது நாளும் பவுர்ணமி
  24. ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
  25. விளக்கு மட்டுமா சிவப்பு?
  26. வேலங்குடித் திருவிழா
  27. ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  1. ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
  2. ஒரு நதியின் கதை
  3. கண்ணதாசன் கதைகள்
  4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  5. குட்டிக்கதைகள்
  6. பேனா நாட்டியம்
  7. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
  8. செண்பகத்தம்மன் கதை
  9. செய்திக்கதைகள்
  10. தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  1. எனது வசந்த காலங்கள்
  2. வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
  3. எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
  4. மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்

  1. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  2. இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
  3. இலக்கிய யுத்தங்கள்
  4. எண்ணங்கள் 1000
  5. கடைசிப்பக்கம்
  6. கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
  7. கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  8. காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ்
  9. கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.
  10. குடும்பசுகம்
  11. சந்தித்தேன் சிந்தித்தேன்
  12. சுகமான சிந்தனைகள்
  13. செப்புமொழிகள்
  14. ஞானமாலிகா
  15. ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ்
  16. தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
  17. தென்றல் கட்டுரைகள்
  18. தெய்வதரிசனம்
  19. தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ்
  20. தோட்டத்து மலர்கள்
  21. நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
  22. நான் இறைவனைச் சந்திக்கிறேன்
  23. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  24. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
  25. நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ்
  26. பயணங்கள்
  27. புஷ்பமாலிகா
  28. போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
  29. மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
  30. ராகமாலிகா
  31. வாழ்க்கை என்னும் சோலையிலே

சமயம்

  1. அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
  2. அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
  3. அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
  4. அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
  5. அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
  6. அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
  7. அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
  8. அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
  9. அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
  10. அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  1. அனார்கலி
  2. சிவகங்கைச்சீமை
  3. ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

  1. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  2. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  3. ஆண்டாள் திருப்பாவை
  4. எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
  5. கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
  6. சங்கர பொக்கிஷம்
  7. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  8. தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
  9. திருக்குறள் காமத்துப்பால்
  10. பகவத் கீதை
  11. மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்

பேட்டிகள்

  1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
  2. சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

  1. ஐயம் அகற்று
  2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்ணதாசன்&oldid=3817251" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழக வெற்றிக் கழகம்தேர்தல் பத்திரம் (இந்தியா)சுப்பிரமணிய பாரதிபவானிகாடுவெட்டி குருதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024திருக்குறள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வானிலைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவண்ணாமலைதிருக்குர்ஆன்வெள்ளியங்கிரி மலைமக்களவை (இந்தியா)அசாம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பாரதிதாசன்முருகன்பிரம்ம சூத்திரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்பதினெண் கீழ்க்கணக்குசுமிருதி மந்தனாவிஜய் (நடிகர்)முகம்மது நபிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019எட்டுத்தொகைஇந்திய நாடாளுமன்றம்இந்திய மக்களவைத் தொகுதிகள்திரு. வி. கலியாணசுந்தரனார்குணாவிடுதலை பகுதி 1அறுபடைவீடுகள்திருவள்ளுவர்சூரரைப் போற்று (திரைப்படம்)