கார்லசு புச்திமோன்
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.[3] 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[4] இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
கார்லசு புச்திமோன் Carles Puigdemont | |
---|---|
2016-இல் புச்திமோன் | |
காத்தலோனியாவின் 130-வது அரசுத்தலைவர்[1] | |
பதவியில் 12 சனவரி 2016 – 27 அக்டோபர் 2017 | |
ஆட்சியாளர் | ஆறாம் பிலிப்பு |
முன்னையவர் | ஆர்தர் மாசு |
பின்னவர் | நேரடி ஆட்சி |
எசுப்பானியாவுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூலை 2019[n. 1] | |
குடியரசுப் பேரவையின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 திசம்பர் 2018 | |
முன்னையவர் | புதிய பதவி |
காத்தலோனியா நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 17 சனவரி 2018 – 30 சூலை 2018 | |
தொகுதி | பார்செலோனா |
பதவியில் 10 நவம்பர் 2006 – 27 அக்டோபர் 2017 | |
தொகுதி | கிரோனா |
கிரோனா நகர முதல்வர் | |
பதவியில் 1 சூலை 2011 – 11 சனவரி 2016 | |
கிரோனா மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 11 சூன் 2007 – 11 சனவரி 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கார்லசு புச்திமோன் இ கசமாயோ 29 திசம்பர் 1962 ஆமெர், காத்தலோனியா, எசுப்பானியா |
குடியுரிமை | எசுப்பானியர் |
அரசியல் கட்சி | காத்தலோனியாவுக்கான கூட்டு (2020–present) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | மார்செலா தப்போர் (தி. 2000) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | வாட்டர்லூ, பெல்ஜியம் |
வேலை | ஊடகவியலாளர், அரசியல்வாதி |
கையெழுத்து | |
இணையத்தளம் | Carles Puigdemont |
ஆட்சிக் கவிழ்ப்பு
கார்லசு புச்திமோன் 2017 அக்டோபர் 27 அன்று எசுப்பானியாவில் இருந்து காத்தலோனியா தன்னிச்சையாக விடுதலையை அறிவித்ததைத் தொடர்ந்து கார்லசு காத்தலோனியாவின் அரசுத்தலைவராக இருக்கும் நிலை சர்ச்சைக்குரியதாயிற்று. எசுப்பானியப் பிரதமர் மரியானோ ரஜோயா, 2017 அக்டோபர் 28 அன்று புச்திமோனை காத்த்லோனிய அரசுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்தார்.[5] ஆனால் புச்திமோன் தனது பதவி நீக்கத்தை அங்கீகரிக்கவில்லை. தான் ஒரு விடுதலை பெற்ற காத்தலோனியாவை உருவாக்கப் போராடுவேன் என்று கூறினார்.[6]
2017 அக்டோபர் 30 அன்று, எசுப்பானிய நீதித்துறையின் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக புச்திமோன் பெல்சியத்திற்குத் தப்பிச் சென்றார்.[7] ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டுமதெசுப்பானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
கைது நடவடிக்கைகள்
நவம்பர் 2 அன்றுதெசுப்பானிய நீதிமன்றம் விடுத்த கைது ஆணையை, புச்திமோனுக்கும், நான்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் பெல்சிய அதிகாரிகளுக்கு வழங்கியது.[9] இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பெல்சியக் காவல்துறையிடம் சரண் அடைந்தனர்.[10] சில மணி நேரம் கழித்து புச்திமோன் விடுவிக்கப்பட்டார்.[11] [12]
2018 மார்ச் 25 அன்று, பின்லாந்துக்கு ஒரு பயணத்திலிருந்து பிரசல்சிற்குத் திரும்புகையில், செருமனியுடனான தென்மார்க்கு எல்லைக்கு அருகில் புச்திமோன் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட ஐரோப்பிய கைதாணையின்படி கைது செய்யப்பட்டார்.[13][14][15] 2018 ஏப்ரல் 5 அன்று, செருமனியின் ஸ்கெல்ஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலத்தில் உள்ள ஒபெர்லேண்டெஸ்கெரிச், கிளர்ச்சிக் குற்றச்சாட்டில் புச்திமோன் ஒப்படைக்கப்படமாட்டார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவரைப் பிணையில் விடுவித்தனர்.[16]
சேதத் துரோக வழக்கில்பெசுப்பானிய உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணையின் படி, 2023 செப்டம்பர் 23 அன்று இத்தாலி, சார்டினியா தீவில் தங்கியிருந்த கார்லசு புச்திமோன் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[17][18]
மேற்கோள்களும் குறிப்புகளும்
- தகவல் குறிப்புகள்
- மேற்கோள்கள்