பாரதிதாசன்

தமிழ் இந்திய எழுத்தாளர் (1891-1964)

பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
பிறப்புசுப்புரத்னம்
(1891-04-29)ஏப்ரல் 29, 1891
புதுவை, இந்தியா
இறப்புஏப்ரல் 21, 1964(1964-04-21) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்பாரதிதாசன், பாவேந்தர்
தொழில்தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
தேசியம்இந்தியர்
கல்விபுலவர்
கல்வி நிலையம்கல்வே கல்லூரி, புதுவை
காலம்20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
வகைதமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருள்இனமானம், அரசியல்
இலக்கிய இயக்கம்திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாண்டியன் பரிசு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது
துணைவர்பழநி அம்மையார்
பிள்ளைகள்சரசுவதி.கண்ணப்பன்
வசந்தா.தண்டபாணி
இரமணி.சிவசுப்ரமணியன்
மன்னர் மன்னன்
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரைப் பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்கு முன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.[2]

"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டுச் 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார் [3]. மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் [4][3][5]. அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

மறைவு

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

  • "எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"..
  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..

இப்பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு, ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2022 இல் ழகரத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு படம் பதிந்தபோது அதில் இடம்பெற்ற வரிகள் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்பதாகும்.

  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 1891-ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1969: அவரது மரணத்திற்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

1990: இவருடைய படைப்புகள் தமிழ் நாடு அரசினால் உடைமையாக்கப்பட்டன.

பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. அம்மைச்சி (நாடகம்) [6]
  2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  4. எது பழிப்பு, குயில் (1948)
  5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [6]
  7. கலை மன்றம் (1955)
  8. கற்புக் காப்பியம், குயில் (1960)
  9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [6]
  10. நீலவண்ணன் புறப்பாடு
  11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [6]
  12. பெண்கள் விடுதலை
  13. விடுதலை வேட்கை
  14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  15. ரஸ்புடீன் (நாடகம்) [6]

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் பாடல்கள், படைப்புகள் மதுரைத் திட்டத்தில் உள்ளன. பாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

வ.எண்நூலின் பெயர்முதற்பதிப்பு ஆண்டுவகைபதிப்பகம்குறிப்பு
01அகத்தியன்விட்ட புதுக்கரடி1948காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
02சத்திமுத்தப்புலவர்1950நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
03இன்பக்கடல்1950நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
04அமிழ்து எது?1951கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
05அமைதி1946நாடகம்செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம்
06அழகின் சிரிப்பு1944கவிதைமுல்லை பதிப்பகம், சென்னை
07இசையமுது (முதலாம் தொகுதி)1942இசைப்பாடல்பாரத சக்தி நிலையம், புதுவை
08இசையமுது (இரண்டாம் தொகுதி)1952இசைப்பாடல்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
09இந்தி எதிர்ப்புப் பாடல்கள்1948இசைப்பாடல்
10இரணியன் அல்லது இணையற்ற வீரன்1939நாடகம்குடியரசுப் பதிப்பகம்1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11இருண்டவீடு1944காவியம்முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை
12இலக்கியக் கோலங்கள்1994குறிப்புகள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
13இளைஞர் இலக்கியம்1958கவிதை
14உலகம் உன் உயிர்1994கவிதைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைவெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15உலகுக்கோர் ஐந்தொழுக்கம்1994கட்டுரைகள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16எதிர்பாராத முத்தம்1938கவிதை-
17எது இசை?1945சொற்பொழிவும் பாடல்களும்கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னைபாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[7]
18ஏழைகள் சிரிக்கிறார்கள்1980சிறுகதைகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு.
19ஏற்றப் பாட்டு1949இசைப்பாடல்பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது1978இசைப்பாடல்பூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
21கடற்மேற் குமிழிகள்1948காவியம்பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22கண்ணகி புரட்சிக் காப்பியம்1962காவியம்அன்பு நிலையம், சென்னை
23கதர் இராட்டினப்பாட்டு,1930இசைப்பாடல்காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி
24கவிஞர் பேசுகிறார்1947சொற்பொழிவுதிருச்சிஅன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25கழைக்கூத்தியின் காதல்1951நாடகம்
26கற்கண்டு1945நாடகம்பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27காதலா? கடமையா?1948காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
28காதல் நினைவுகள்1944கவிதைசெந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம்
29காதல் பாடல்கள்1977கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
30குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி1942காவியம்பாரத சக்தி நிலையம், புதுவை
31குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல்1944காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை
32குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம்1948காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை
33குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு1950காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை
34குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல்1950காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னைஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35குமரகுருபரர்1992நாடகம்காவ்யா, பெங்களூர்1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36குயில் பாடல்கள்1977கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
37குறிஞ்சித்திட்டு1959காவியம்பாரி நிலையம், சென்னை
38கேட்டலும் கிளத்தலும்1981கேள்வி-பதில்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
39கோயில் இருகோணங்கள்1980நாடகம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
40சஞ்சீவி பர்வதத்தின் சாரல்1930காவியம்ம. நோயேல் வெளியீடு, புதுவைபாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41சிரிக்கும் சிந்தனைகள்1981துணுக்குகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
42சிறுவர் சிறுமியர் தேசியகீதம்1930கவிதை
43சுயமரியாதைச் சுடர்1931பாட்டுகிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44செளமியன்1947நாடகம்
45சேரதாண்டவம்1949நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
46தமிழச்சியின் கத்தி1949காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
47தமிழியக்கம்1945கவிதைசெந்தமிழ் நிலையம், ராயவரம்ஒரே இரவில் எழுதியது
48தமிழுக்கு அமிழ்தென்று பேர்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
49தலைமலை கண்ட தேவர்1978நாடகம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
50தாயின் மேல் ஆணை1958கவிதை
51தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு1930பாட்டும. நோயேல் வெளியீடு, புதுவைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52திராவிடர் திருப்பாடல்1948கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்1949கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54தேனருவி1956இசைப்பாடல்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55தொண்டர் வழிநடைப் பாட்டு1930பாட்டு
56நல்லதீர்ப்பு1944நாடகம்முல்லைப் பதிப்பகம், சென்னை
57நாள் மலர்கள்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
58படித்த பெண்கள்1948நாடகம்
59பன்மணித்திரள்1964கவிதை
60பாட்டுக்கு இலக்கணம்1980இலக்கணம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
61பாண்டியன் பரிசு1943காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை
62பாரதிதாசன் ஆத்திசூடி1948கவிதை
63பாரதிதாசன் கதைகள்1955சிறுகதைஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரிசிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64பாரதிதாசனின் கடிதங்கள்2008கடிதங்கள்ச.சு.இளங்கோ பதிப்பு
65பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)1938கவிதைகுஞ்சிதம் குருசாமி, கடலூர்
66பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)1949கவிதைபாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரிஇ.பதிப்பு 1952
67பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)1955கவிதை
68பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)1977கவிதைபாரி நிலையம், சென்னை.
69பாரதிதாசன் நாடகங்கள்1959கவிதைபாரி நிலையம், சென்னை
70பாரதிதாசனின் புதிய நாடகங்கள்1994நாடகங்கள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
71பாரதிதாசனின் புதினங்கள்1992புதினம்ச.சு.இளங்கோ பதிப்பு
72பாரதிதாசன் பேசுகிறார்1981சொற்பொழிவுச.சு.இளங்கோ பதிப்பு.
73பாரதிதாசன் திருக்குறள் உரை1992உரைபாரி நிலையம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
74பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்2012திரைக்கதைபாரி நிலையம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75பிசிராந்தையார்1967நாடகம்1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76புகழ்மலர்கள்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
77புரட்சிக் கவி1937கவிதைஶ்ரீசாரதா பிரஸ், புதுவைபாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78பொங்கல் வாழ்த்துக் குவியல்1954கவிதைபாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
79மணிமேகலை வெண்பா1962கவிதை
80மயிலம் சுப்பிரமணியர் துதியமுது1926இசைப் பாடல்காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி
81மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்1925கவிதைஜெகநாதம் பிரஸ், புதுவை
82மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு1920இசைப்பாடல்ஜெகநாதம் பிரஸ், புதுவை
83மானுடம் போற்று1984கட்டுரைகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
84முல்லைக்காடு1948கவிதைஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி
85வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?1980இலக்கணம்பூம்புகார் பிரசுரம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
86வேங்கையே எழுக1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு

திரையுலகில் பாரதிதாசன் [8]

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு எனப் பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல்

அவ்வகையில் இவர் பின்வரும் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதினார்:

வ.எண்.திரைப்படத்தின் பெயர்ஆண்டுஇயக்குநர்கதாநாயகன்தயாரிப்பாளர்குறிப்பு
1பாலாமணி அல்லது பக்காத்திருடன்1937-தி. க. சண்முகம்-
2இராமானுஜர்1938வ. ராமசாமிசங்கு சுப்ரமணியம்-
3கவிகாளமேகம்1940எல்லிஸ் ஆர். டங்கன்டி. என். ராஜரத்தினம்-
4சுலோசனா1944டி. ஆர். சுந்தரம்டி. ஆர். சுந்தரம்மார்டன் தியேட்டர்ஸ்
5ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி1947-பி. எஸ். கோவிந்தன்-
6பொன்முடி1949-பி. வி. நரசிம்மபாரதி-
7வளையாபதி1952-ஜி.முத்துக்கிருட்டிணன்-
8குமரகுருபரர்---மாடர்ன் தியேட்டர்ஸ்
8பாண்டியன் பரிசு-சிவாஜி கணேசன்பாரதிதாசன் பிக்சர்ஸ்தொடக்கவிழாவோடு நின்றுவிட்டது
9முரடன்முத்து---பாரதிதாசன் பிக்சர்ஸ்படமாக உருவாகவில்லை
10மகாகவி பாரதியார்---பாரதிதாசன் பிக்சர்ஸ்படமாக உருவாகவில்லை

இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களைத் தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். இவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றைச் சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண்பாடல்கள்திரைப்படம்ஆண்டுபாடகர்இசையமைப்பாளர்
1அனைத்துப் பாடல்களும்பாலாமணி அல்லது பக்காத்திருடன்1937--
2அனைத்துப் பாடல்களும்ஸ்ரீ ராமானுஜர்1938--
3அனைத்துப் பாடல்களும்காளமேகம்1940--
4துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ...ஓர் இரவு1951எம். எஸ். ராஜேஸ்வரிஆர். சுதர்சனம்
5அதோ பாரடி அவரே என் கணவர்...கல்யாணி1952பி. லீலாஎஸ். தட்சிணாமூர்த்தி & ஜி. ராமனாதன்
6வாழ்க வாழ்க வாழ்கவே...பராசக்தி1952எம். எல். வசந்தகுமாரிஆர். சுதர்சனம்
7பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு...பணம்1952-விஸ்வநாதன்-ராமமூர்த்தி
8அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?...அந்தமான் கைதி1952-ஜி. கோவிந்தராயுலு நாயுடு
9குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை...வளையாபதி1952டி. எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணிஎஸ். தட்சிணாமூர்த்தி
10குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி...வளையாபதி1952டி. எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணிஎஸ். தட்சிணாமூர்த்தி
11தாயகமே வாழ்க தாயகமே வாழ்க...பூங்கோதை1953-பி. ஆதி நாராயண ராவ்
12பாண்டியன் என் சொல்லை.....திரும்பிப்பார்1953பி. லீலாஜி. ராமனாதன்
13ஆலையின் சங்கே நீ ஊதாயோ…ரத்தக்கண்ணீர்1954எம். எல். வசந்தகுமாரிசி. எஸ். ஜெயராமன்
14எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்என் மகள்1954எஸ். வரலட்சுமிசி. என். பாண்டுரங்கன
15வெண்ணிலாவும் வானும் போல...கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி1954ராதா ஜெயலட்சுமிடி. ஜி. லிங்கப்பா
16நீலவான் ஆடைக்குள் உடல் ...கோமதியின் காதலன்1955ஏ. எம். ராஜாஜி. ராமனாதன்
17ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்...நானே ராஜா1955பி. லீலா & என். எல். கானசரஸ்வதிடி. ஆர். ராம்நாத்
18தலைவாரி பூச்சூடி உன்னை-பாட...ரங்கோன் ராதா1956பி. பானுமதிடி. ஆர். பாப்பா
19கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே...குலதெய்வம்1956சி. எஸ். ஜெயராமன்ஆர். சுதர்சனம்
20ஒரே ஒரு பைசா தருவது பெரிசா...பெற்ற மனம்1960சூலமங்கலம் ராஜலட்சுமிஎஸ். ராஜேஸ்வர ராவ்
21பாடிப் பாடிப் பாடி வாடி...பெற்ற மனம்1960ஜே. பி. சந்திரபாபு & சூலமங்கலம் ராஜலட்சுமிஎஸ். ராஜேஸ்வர ராவ்
22மனதிற்குகந்த மயிலே வான்விட்டு...பெற்ற மனம்1960ஜே. பி. சந்திரபாபுஎஸ். ராஜேஸ்வர ராவ்
23தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த...பஞ்சவர்ணக்கிளி1965பி. சுசீலாவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
24எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...கலங்கரை விளக்கம்1965சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலாஎம். எஸ். விஸ்வநாதன்
25வலியோர் சிலர் எளியோர் தமை...மணிமகுடம்1966டி. எம். சௌந்தரராஜன்ஆர். சுதர்சனம்
26புதியதோர் உலகம் செய்வோம்-கெட்டசந்திரோதயம்1966சீர்காழி கோவிந்தராஜன்எம். எஸ். விஸ்வநாதன்
27எங்கெங்குக் காணிணும் சக்தியடா !...நம்மவீட்டு தெய்வம்1970டி. எம். சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்
28சித்திரச் சோலைகளே-உமை நன்கு....நான் ஏன் பிறந்தேன்1972டி. எம். சௌந்தரராஜன்சங்கர் கணேஷ்
29புதியதோர் உலகம் செய்வோம்பல்லாண்டு வாழ்க1975டி. எம். சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்கே. வி. மகாதேவன்
30காலையிளம் பரிதியிலே ...கண்ணன் ஒரு கைக்குழந்தை1978எஸ். பி. பாலசுப்பிரமணியம்இளையராஜா
31அம்மா உன்றன் கைவளையாய் ...நிஜங்கள்1982வாணி ஜெயராம்எம். பி. சீனிவாசன்
32கொலை வாளினை எடடா...சிவப்பதிகாரம்2006ராகுல் நம்பியார் & கதிர்வித்யாசாகர்
33அவளும் நானும் அமுதும் தமிழும்அச்சம் என்பது மடமையடா2016விஜய் யேசுதாஸ்ஏ. ஆர். ரகுமான்

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் புதுவை முரசு, குடியரசு, குறள் மலர் மற்றும் குயில் ஆகிய இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[9]

வரிசை எண்கட்டுரைத் தலைப்புவெளியான இதழ்நாள்
1பெண்களின் சமத்துவம்விபரம் இல்லைவிபரம் இல்லை
2கடவுள் ஒன்றுபுதுவை முரசு22.12.1930
3ஜாதிச் சண்டைபுதுவை முரசு12.01.1931
4குழந்தை இந்தியாபுதுவை முரசு19.01.1931
5வைர மணிகள்புதுவை முரசு09.02.1931
6சனியனை வணங்குவது சரியாபுதுவை முரசு16.02.1931
7ஊழ்புதுவை முரசு16.02.1931
8வெண்ணெய் வாழைதான்புதுவை முரசு16.02.1931
9சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம்புதுவை முரசு09.03.1931
10டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்?புதுவை முரசு22.03.1931
11துக்கடாபுதுவை முரசு30.03.1931
12சுயமரியாதைக்காரர்களே தொலைந்து போய்விடுங்கள்!புதுவை முரசு06.04.1931
13மானுடம் போற்று!புதுவை முரசு18.05.1931
14ஆஸ்திகமே அறிவைக் கெடுத்ததுபுதுவை முரசு20.07.1931
15கடவுள் சிருஷ்டியா?புதுவை முரசு16.11.1931
16குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்புதுவை முரசு22.02.1932
17இனி என்ன செய்யப் போகிறீர்கள்?புதுவை முரசு22.02.1932
18சமத்துவம், சகோதரத்துவம், சுத்ந்திரம்புதுவை முரசுமார்ச்சு,1932
19லெளகிகத்தின் துஷ்டப் பிள்ளை வைதிகம்புதுவை முரசுமார்ச்சு, 1932
20சேசுநாதர் வருகைபுதுவை முரசு21.03.1932
21அம்மியும் நகரும்குடியரசு26.03.1933
22பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம்புதுவை முரசுமார்ச்சு, 1932
23அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடிகுடியரசு09.04.1933
24எழுத்துச் சிக்கனம்குயில்15.05.1948
25குள்ளநரியின் குதிப்புக்கு மறுப்புகுயில்15.05.1948
26மறைமலை அடிகளார்குறள் மலர்29.09.1950
27தமிழன் யார்?குயில்01.06.1958
28இவர்களைப் பாருங்கள்குயில்16.06.1959
29பாருங்கள் அவர்களைகுயில்16.06.1959
30அவர்களைப் பாருங்கள்குயில்16.06.1959
31ஏழ்மை ஒழியுமா?குயில்02.02.1960
32உண்டு என்பார்! இல்லைஎன்பார்!குயில்10.05.1960
33பொன்னும் தங்கமும்குயில்02.08.1960
34உருசியாவில் திருக்குறள் விளக்கம்குயில்13.09.1960
35செங்கோன் தரைச் செலவு தமிழுக்கு வரலாறு உண்டுகுயில்04.10.1960
36தமிழகத்தில் பஞ்சாயத்து ஆட்சிகுயில்04.10.1960
37தெய்வமிகழேல்குயில்11.10.1960
38கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்குயில்18.10.1960
39அரிசி சோம்பலை உண்டாக்குமா?குயில்08.11.1960
40தமிழன் வெற்றி எங்கிருக்கிறது?கலைக்கதிர்1962
41அடி; நொறுக்கிவிடுவிபரம் இல்லை15.09.1969
42சாதி ஏன்?குயில்10.02.1962

பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்

  1. வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 [10]

பாரதிதாசன் பற்றிய நூல்கள்

  1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bharathidasan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாரதிதாசன்&oldid=3886343" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை