உஷா கிரண் கான்
உஷா கிரண் கான் (Usha Kiran Khan;[1] 24 அக்டோபர் 1945 – 11 பெப்ரவரி 2024)[2] இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் பணிபுரியும் ஒரு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கல்வி வரலாற்றாசிரியரும் ஆவார்.[3]
தொழில்
பிரபல எழுத்தாளரும் புதின ஆசிரியருமான நாகார்ஜுன் என்பவரை தனது எழுத்துக்களின் தாக்கங்களாக கூறுகிறார். நாகார்ஜுன் பல புதினங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் மற்றும் மைதிலி மொழியை எழுதியுள்ளார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
உஷா கிரண் கான் இந்திய காவல்துறையில் பணியாற்றிய இராம் சந்திரகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[5] உஷா கிரண்கான் 2024 பெப்ரவரி 11 இல் பீகார், பட்னாவில் இறந்தார்.[6][7][8]
விருதுகள்
2011 ஆம் ஆண்டில், பாமதி: ஏக் அவிஸ்மரனியா பிரேம்கதா என்ற மைதிலி புதினத்துக்கு உஷா ஒரு சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[9][10] இந்த விருதை இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் அமைப்பான சாகித்திய அகாடமி வழங்குகிறது.
2012 ஆம் ஆண்டில், இவரது சிர்ஜன்ஹார் என்ற நூலுக்காக இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பால் இவருக்கு குசுமாஞ்சலி சாகித்ய சம்மான் விருது வழங்கப்பட்டது.[11][12] இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு இதுவாகும்.[13] மேலும் அவற்றில் ரூ .2,50,000 தொகையும் அடங்கும்.[14]
இவரது இலக்கியம் மற்றுயை கௌரவிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[15]
மேற்கோள்கள்
மேலும் படிக்க
- Devakānta Jhā (2004). A History of Modern Maithili Literature: Post-independence Period, Sahitya Akademi Publications, ppg. 199, 241-242, 251, etc.
வெளி இணைப்புகள்
- Dr. Usha Kiran Khan பரணிடப்பட்டது 2021-11-29 at the வந்தவழி இயந்திரம், Kusumanjali Sahitya Samman 2012