கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா (The Keibul Lamjao National Park) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு சுமார் 40 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவினுள் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் இது 1966 ஆம் ஆண்டு வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தியதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1][2][3][4][5]இத்தேசியப் பூங்காவானது மீன் பிடிப்போராலும், வெள்ளப்பெருக்கினாலும், மின் உற்பத்தி நிலையத்தினாலும் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பூங்கா மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரிலிருந்து 53 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() | |
பரப்பளவு | 40 சதுர கிலோமீட்டர்கள் |
நிறுவப்பட்டது | 28 மார்ச் 1977 |
manipurforest |
புகைப்படங்கள்
இப்பூங்காவிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களுள் சில கீழே,