பாபர் (சீர்வேக ஏவுகணை)

பாபர் ஏவுகணை (Babur, உருது: بابر) பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் தயாரித்த ஏவுகணை ஆகும். இவ்வேவுகணைக்கு முகலாய மன்னர் பாபரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் முதல் சீர்வேக ஏவுகணை ஆகும். இதன் தாக்கும் திறன் 700 கிலோமீட்டர்கள் ஆகும். மேலும் இந்த ஏவுகணை ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][2][3] 2005 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வேவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது..[4] இதன் உயரம் 6.25 மீட்டர்கள், விட்டம் 0.52 மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த எடை 1500 கிலோகிராம்கள் ஆகும். இதில் 300 கிலோகிராம் வெடிபொருளைச் சுமந்து செல்லும் ஆற்றல் உடையது. இதன் வேகம் 800 கிலோமீட்டர்கள்/மணி ஆகும். இதன் இயந்திரங்களின் எரிபொருட்கள் திட மற்றும் திரவ எரிபொருட்கள் ஆகும்.

பாபர் ஏவுகணை

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்