சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999 (Environment Protection and Biodiversity Conservation Act 1999)(சுபாபப சட்டம்), என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான சட்டம் மற்றும் தொடர்புடைய நோக்கங்களுக்காக, ஆத்திரேலிய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். ஆத்திரேலிய சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளிட்ட இயற்கைப் பாதுகாப்புக்கான கட்டமைப்பை இச்சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டம் 2000ஆம் ஆண்டு சூலை 17ஆம் தேதி இயற்றப்பட்டது. இது அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சமூகங்களை மீட்டெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கும் உதவும் பல செயல்முறைகளை நிறுவியது. சுபாபபா சட்டம் சூன் 2020 நிலவரப்படி ஆத்திரேலியாவின் வேளாண்மை, நீர் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியல்கள் இச்சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பட்டியல்கள், ஆத்திரேலியாவில் அழிந்து வரும் உயிரினங்களின் முதன்மைக் குறிப்பு, இனங்கள் சுயவிவரம் மற்றும் அச்சுறுத்தல்கள் தரவுத்தளத்தின் மூலம் இணையவழியில் கிடைக்கின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999
சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு தொடர்புடைய நோக்கங்களுக்காக ஒரு சட்டம்
இயற்றியதுஆஸ்திரேலியா பாராளுமன்றம்
அறிமுகப்படுத்தியதுபில் கெப்பர்மான், அயன் கேம்பெல்,

ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் சட்டமாக, இது ஆஸ்திரேலிய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களை இதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை நம்பியுள்ளது. மேலும் இச்சட்டத்தின் முக்கிய விதிகள் பெரும்பாலும் பல பன்னாட்டு, பலதரப்பு அல்லது இருதரப்பு ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தச் சட்டத்தின் மீதான மதிப்பாய்வுகள், தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் இச்சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளன. இதனால் போதுமான சுற்றுச்சூழல் பாதுகாப்பை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 2020 நிலவரப்படி சட்டம் பேராசிரியர் கிரேம் சாமுவேல் தலைமையில் ஒரு சுயாதீனமான சட்டரீதியான மதிப்பாய்வு செய்யப்பட்டது. சூலை மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே, 27 ஆகத்து 2020-ல் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த முன்வடிவினை அறிமுகப்படுத்தினார்.

தேசிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

2020ஆம் ஆண்டு நிலவரப்படி, தேசிய சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தின் ஒன்பது விடயங்களை இந்த சட்டம் அடையாளம் காட்டுகிறது:[1]

இதனை ஒவ்வொரு ஐந்து வருட காலப்பகுதியில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மேலும் அரசாங்கம் இந்த பட்டியலில் புதிய விடயங்களை ஒழுங்குமுறை மூலம் சேர்க்கலாம். "ஒரு முன்மொழியப்பட்ட நடவடிக்கை எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அது தொடங்குவதற்கு முன் பொதுநலவாய ஒப்புதல் பெறப்படவேண்டும். பொதுநலவாய அங்கீகாரம் இல்லாமல் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது சட்டவிரோதமானது." [3] தேசிய சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தின் விடயங்கள்: குறிப்பிடத்தக்கத் தாக்க வழிகாட்டுதல்கள் 1.1 "தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விடயத்தில் ஒரு நடவடிக்கை குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைத் தீர்மானிப்பதில் மேலோட்டமான வழிகாட்டுதலை வழங்குகிறது".[4]

அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்கள்

அச்சுறுத்தப்பட்ட விலங்கினங்கள் போன்ற அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியல்கள் இச்சட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியல்கள் ஆத்திரேலியாவில் அழிந்து வரும் உயிரினங்களின் முதன்மைக் குறிப்பாகும். மேலும் இந்த இனங்களின் சுயவிவரம் மற்றும் அச்சுறுத்தல் தரவுத்தளத்தின் (SPRAT) மூலம் இணையத்தில் கிடைக்கின்றன.[5]

ஒப்பந்தங்கள்

ஆத்திரேலிய பாராளுமன்றத்தின் சட்டமாக, இது சுற்றுச்சூழலை வெளிப்படையாகக் குறிப்பிடாத, ஆத்திரேலிய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களின்படி இந்த அரசியலமைப்புச் செல்லுபடியாகும். எனவே, இச்சட்டத்தின் முக்கிய விதிகள் பெரும்பாலும் பல ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை:[6][7]

  • ராம்சர் சாசனம் - பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் பற்றிய மாநாடு, குறிப்பாக நீர்ப்பறவைகளின் வாழ்விடம், 2 பிப்ரவரி 1971
  • உலக பாரம்பரியக் களம் – உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான மாநாடு, 23 நவம்பர் 1972
  • வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்துவரும் உயிரினங்களில் பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான மாநாடு (சிஐடிஇஎஸ்) - வாசிங்டன் டி. சி., 3 மார்ச் 1973 (1 சூலை 1975 அமலாக்கப்பட்டது)
  • வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த மாநாடு (பான் கன்வென்ஷன்), 23 சூன் 1979
  • உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாடு - இரியோ டி செனீரோ, 5 சூன் 1992

வலசைப்போகும் பறவைகள் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் பின்வருமாறு:[6]

  • அழிந்து போகும் அபாயத்தில் உள்ள வலசை போகும் பறவைகள் மற்றும் பறவைகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஜப்பான் அரசாங்கத்திற்கும் ஆஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் (ஜம்பா), 1974
  • 1986ஆம் ஆண்டு வலசைப்போகும் பறவைகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் 1986
  • 2006ஆம் ஆண்டு வலசைப்போகும் பறவைகளைப் பாதுகாப்பதில் ஆஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் கொரியா குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்

தொடர்புடைய செயல்கள்

  • ஆத்திரேலியாவின் இயற்கை பாரம்பரிய அறக்கட்டளை சட்டம் 1997, இது இயற்கை பாரம்பரிய அறக்கட்டளையை நிறுவியது மற்றும் தேசிய நிலப்பரப்பு திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் திஅச்ட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

மாநில சட்டங்கள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்