வீரத்தமிழர் முன்னணி
வீரத்தமிழர் முன்னணி என்பது நாம் தமிழர் கட்சியின் ஒரு துணை அமைப்பாகும். இது தமிழர் மெய்யியல் மீட்பை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.[சான்று தேவை]
வீரத்தமிழர் முன்னணி | |
---|---|
தலைவர் | சீமான் |
தொடக்கம் | 2015 பிப் 7[1] |
தலைமையகம் | கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை – 600 116. |
கொள்கை | தமிழர் மெய்யியல் |
இணையதளம் | |
naamtamilar | |
இந்தியா அரசியல் |
துவக்கமும் நிகழ்ச்சிகளும்
வீரத்தமிழர் முன்னணி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் நகரில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் துவக்கப்பட்டது.[2] இதனைத் துவக்கிய சீமான் இறைநம்பிக்கை கொண்டவர்கள், திருவள்ளுவர் நெறிகளைப் பின்பற்றுவோர்களுக்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டதாகவும் இது திராவிட இயக்கத்திற்கு மாற்றாகச் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.[2]
திருசெந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த கோரி பேரணி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி திருச்செந்தூர் கோவில் வரை நடைபெற்றது.[3] "வேல் வழிபாடு" 2016 ஆம் ஆண்டு முதல் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூச நாளில் கொண்டாடி வருகிறது.[4] ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.[5]