அர்வாரி நதி

அர்வாரி ஆறு (Arvari River) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய ஆறு. 90 கிமீ நீளமான இந்த ஆறு, ராஜஸ்தானின் ஆல்வர் மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறு 60 ஆண்டுகளுக்கு உலர்ந்த நிலையில் இருந்த பிறகு, இது 1990 ல் புதுப்பிக்கப்பட்டது. ராஜேந்திர சிங் நிர்வகிக்கும் தருண் பாரத் சங்கத்தின் உதவியுடன் பானோட்டா-கொலிலா கிராமத்தில் உள்ள மக்கள், ஆறு உருவாகும் இடத்தில் தடுப்பணையை 1986 ஆம் ஆண்டு உருவாக்கினர். அதைத் தொடர்ந்து ஆற்றோட்டப் பாதையினோரமான கிராம மக்களும் தடுப்பணைகளைக் கட்டினர். அணைகள் எண்ணிக்கை 375 ஐ எட்டியபோது, 1990 ஆம் ஆண்டில் மீண்டும் ஆறு ஓடத் தொடங்கியது. 60 ஆண்டுகளுக்கு மேலாக உலர்ந்த நிலையில் இருந்த பாேதும், 1995 ஆம் ஆண்டிலிருந்து அது வற்றாத நதியாக மாறியது. இந்த ஆற்றிற்கு 2004 ஆம் ஆண்டின் 'சர்வதேச நதி பரிசு' வழங்கப்பட்டது. 2000 மார்ச்சில் அப்போதைய ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் "டவுன் டூ பூமி" என்ற தலைப்பை வழங்கினார். ராஜேந்திர சிங்கிற்கு 2001 ஆம் ஆண்டில் மாக்சேசே விருது வழங்கப்பட்டது.[1][2][3]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அர்வாரி_நதி&oldid=3541454" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்