அஸ்தேவ் அரந்த்
அஸ்தேவ் அரந்த் (Hasdeo Arand), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கில் உள்ள கோர்பா மாவட்டம், சூரஜ்பூர் மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டங்களில்[1] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது. அஸ்தேவ் அரந்த் 1,70,000 எக்டேர் பரப்பளவில் அமைந்த காட்டுப்பகுதியாகும். சிவப்பு தாழ்வாரம் அமைந்த இக்காட்டுப் பகுதியில் கோண்டு மக்கள் உள்ளிட்ட 10,000 பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.[2][3] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் இந்திய அரசு நிலக்கரி வயல்கள் தோண்டுவதால், காட்டு வளம் அழிக்கப்படுகிறது.[4][5][6][7][8][9][10][11] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது.
அஸ்தேவ் அரந்த் நிலக்கரி வயல்கள்
அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் சத்தீஸ்கர் அரசின் 23 நிலக்கரி வயல்கள் 1,879.6 கிமீ2 பரப்பளவில் செயல்படுகிறது.[12] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியின் நிலத்தடியில் 5.179 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[13] நிலக்கரி வயல்களால் இப்பகுதியில் வன வளம் சீர்கெட்டுள்ளது.