இராமசாமிக் கவிராயர்

இராமசாமிக் கவிராயர் பாடியனவாக 12 பாடல்கள் அச்சேறியுள்ளன.[1] அவற்றில் பதினோரு பாடல்கள் மணலி இராமன் என்னும் காதலன் மாட்டுத் தலைவி அவனது மாலையை வாங்கிவரும்படித் தோழியரைத் தூது அனுப்புவதாக சில பாடல்களும், குருகு, அன்னம் முதலானவற்றைத் தூது விட்டதாக கூறும் பாடல்களும் அமைந்துள்ளன. கடைசியில் உள்ள பாடல் வெறிவிலக்கல் என்னும் துறை பற்றியதாக உள்ளது.[2]

அவனை வள்ளல் என்று காட்டுவதற்காக ஒரு பாடல் அவன் பெயரைக் கன்னன் என்று குறிப்பிடுகிறது.[3] இராமன் என்னும் அவன் பெயரை இலங்கையை வென்றோன் மருகன் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[4] குருகினைத் தூது விடும் பாடல் ஒன்று அவனை வரதுங்கராமன் என்று குறிப்பிடுகிறது.[5] அவன் மனையைத் தேராக்கித், தன் மகனைத் தேரோட்டியாக்கித், தன் பேரக்குழந்தைகளைத் தேர்க்காலாக்கித், தன்னை ஒரு அம்பாக்கிக்கொண்டு என்மேல் எய்கிறான் என்று தலைவி கூறுவதாக ஒரு பாடல் உள்ளது.[6] புதுவை முத்துகுமர தொண்டன் என்பவர் போல் கவி பாட முடியாது என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[7] கலசைத் தெய்வசிகாமணி என இவன் பெயரை ஒரு பாடல் தெரிவிக்கிறது.[8] பருத்திப் பொதியில் இட்ட தீயைப் போலக் காமம் தன்னை வருத்துதாகக் கூறும் உவமை புதுமையாகவும் சிறப்பாகவும் உள்ளது.[9]

அடிக்குறிப்பு

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்