சூர்பரக நாடு

சூர்பரக நாடு (Shurparaka) பரத கண்டத்தின் புராண காலத்திலிருந்த ஒரு நாடாகும். இந்நாட்டை நிறுவியவர் பரசுராமர் ஆவார். நர்மதை ஆறு மேற்குக் கடலில் கலக்கும் வடிநிலத்தில் சூர்பரக நாட்டை நிறுவினார். சூர்பரக நாட்டைக் குறித்து மகாபாரத காவியத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பரசுராமர் இந்நாட்டை காசிப முனிவருக்கு வழங்கி விட்டதாகவும், பின்னர் காசிபர் அந்நாட்டை அந்தண ஆட்சியாளர்களுக்கு வழங்கி விட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.

தற்போது சூர்பரக நாட்டின் பெயர் சூபரா அல்லது நள சூர்பரா எனும் பகுதியாக மகாராட்டிரம் மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் அரபுக்கடற்கரையில் உள்ளது. [1]

மகாபாரதக் குறிப்புகள்

சகாதேவனின் தென்னிந்திய படையெடுப்புகள்

மகாபாரதம், சபா பருவத்தின் அத்தியாயம் 30-இல், தருமன் நடத்திய இராசசூய வேள்வியின் பொருட்டு, நவநிதிகளை பெற்று வர சகாதேவன் தென்னிந்திய நாடுகள் மீது படையெடுத்தார். அவந்தி நாடு, சௌராட்டிர நாடு, மத்திர நாடு, பௌரவ நாடு, தண்டக நாடு, விதர்ப்ப நாடு, மற்றும் சூர்பரக நாடுகளை வென்று பெரும் கப்பப் பொருட்கள் பெற்றதாக உள்ளது. [2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூர்பரக_நாடு&oldid=2282264" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்