தௌமியர்

தௌமியர், பாண்டவர்களின் புரோகிதர் ஆவார். குந்தி மற்றும் பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி பாஞ்சாலத்திற்கு செல்லும் வழியில், ஒரு கந்தர்வனின் அறிவுரையின்படி, தௌமியரை தங்களது புரோகிதராக வைத்துக் கொண்டனர்.[1] பின் தௌமியருடன் திரௌபதியின் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு பாஞ்சால அரசவைக்குச் சென்றனர்.

துரியோதனனுடன் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர், தௌமியருடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வின் போது பாண்டவர்களுடன் தங்கினார்.இவரே சூரிய பகவானிடமிருந்து அட்சயப் பாத்திரம் பெற தருமனுக்கு மந்திரங்களை உபதேசித்தவர்.

விராட பருவத்தில் ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை விராடனின் அரண்மனையில் கழிக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என பாண்டவர்களுக்கு அறிவுரை வழங்கி, பின் துருபதன் நாடான பாஞ்சாலத்தில் சென்று தங்கினார்.

உத்தியோகப் பருவத்தில், சூதாட்ட விதிப்படி 12 ஆண்டு வன வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வும் முடித்த பாண்டவர்களுகளுக்கு உரிய நாடு கோரி, அத்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனை சந்திக்க தூது சென்றார்.[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தௌமியர்&oldid=3842008" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்