புத்தசரிதம்
புத்தசரித்திரம் (Buddhacharita) ("Acts of the Buddha"); Buddhacaritam, தேவநாகரி बुद्धचरितम्) இந்தியக் காவிய கவிதை நூலாகும். சமசுகிருதம் செம்மொழி தகுதி அடைந்த பின் எழுதப்பட்ட இக்காவிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் பௌத்த அறிஞரான அஸ்வகோசர் ஆவார். இந்நூல் கௌதம புத்தரின் செயல்பாடுகளையும், உபதேசங்களையும் புகழ்ந்து, கி பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். [1]
கி பி 420-இல் தர்மசேனர் என்பவர்[2] இந்நூலை சீன மொழியில் மொழி பெயர்த்தார். கி பி 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில், அஷ்வகோஷரின் புத்தசரித்திரம் நூல் திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. [3][4]
ஆங்கில மொழிபெயர்ப்புகள்
எட்வர்டு பைல்ஸ் கோவெல் (Edward B. Cowell) என்பவர் புத்தசரித்திரம் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளார். [5] [6] சாமுவேல் பீல் [7][8] Edward B. Cowell மற்றும் இ. எச். ஜான்ஸ்டன் போன்றோரும் புத்தசரித்திரம் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.
இதனையும் காண்க
- அஸ்வகோசர்
- தர்மசேனர்