ஜனவரி 9, 1606: திருத்தந்தை ஐந்தாம் பால், பதுரவாதோ மறைபரப்பு பணியின் பொறுப்பாளரான போர்ச்சுக்கல் அரசருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக மயிலாப்பூர் மறைமாவட்டம் உருவானது.
1642: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
1832: மெட்ராஸ் அப்போஸ்தலிக்க மறைவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
செப்டம்பர் 1, 1886: மாநகர மெட்ராஸ் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
அக்டோபர் 10, 1950: பதுரவாதோ முறை ரத்து செய்யப்பட்டது. மயிலாப்பூர் மறைமாவட்டம் வேறு (Propaganda Fide) ஆளுகையின்கீழ் சென்றது.
நவம்பர் 13, 1952: திருத்தந்தை 12ம் பயஸ்திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் இருந்து (Ex primaevae ecclesiae) என்ற ஆணையின்படி, சென்னை மற்றும் மயிலாப்பூர் மறைமாவட்டங்கள் இணைக்கப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.