அபாடி பானோ பேகம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
அபாடி பானோ பேகம் ( பி அம்மான்) | |
---|---|
பிறப்பு | 1850 (1850) உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 13 நவம்பர் 1924(1924-11-13) (அகவை 73–74) |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்க ஆர்வலர்[1] |
வாழ்க்கைத் துணை | அப்துல் அலி கான் [1] |
பிள்ளைகள் | 6 முஹம்மது அலி ஜவ்ஹர் சௌகத் அலி |
அபாடி பானோ பேகம் (பி அம்மான்) (பிறப்பு 1850 இறப்பு: 13 நவம்பர் 1924) இந்திய விடுதலை இயக்கத்தின். ஒரு முக்கிய குரலான இவர் பி அம்மான் என்றும் அழைக்கப்பட்டார். அரசியலில் தீவிரமாக பங்கேற்ற முதல் முஸ்லிம் பெண்களில் ஒருவரான இவர், பிரித்தானிய அரசிடமிருந்து இந்தியாவை விடுவிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
1839 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் அம்ரோகாகிராமத்தில் பிறந்த இவர், ராம்பூர் மாநிலத்தின் மூத்த அதிகாரியான அப்துல் அலி கான் என்பவரை மணந்தார். [2] [3] தம்பதியருக்கு ஒரு மகளும் ஐந்து மகன்களும் இருந்தனர். [4] இளம் வயதிலேயே கணவன் இறந்த பிறகு, [3] தன் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பு இவர் மீது விழுந்தது. தன்னிடம் குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், அபாடி பானோ பேகம் தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக தனது நகைகளை அடகு வைத்தார். [3] [1] பானோ பேகம் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் உள்ள ஆங்கில வழிப் பள்ளியில் தனது குழந்தைகள் கல்வி பயில அனுப்பினார். [3] இவரது மகன்கள், மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் மற்றும் மௌலானா செளகத் அலி ஆகியோர் கிலாபத் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னணி நபர்களாக மாறினர். பிரித்தானிய ராச்சியத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தின் போது அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
அபாடி பானோ பேகம் அரசியலிலும் தீவிரமாக பங்கேற்றார். மேலும் கிலாபத் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 1917 இல், அன்னி பெசண்ட் மற்றும் அவரது இரண்டு மகன்களை சிறையில் இருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இவர் இணைந்தார். [5] சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதால், மகாத்மா காந்தி இவரைப் பேச ஊக்குவித்தார். [6] 1917 ஆம் ஆண்டில், அகில இந்திய முசுலிம் லீக்கின் அமர்வுகளின் போது, இவர் மிகவும் மனதைத் தொடும் வகையில் வலிமையான உரையை நிகழ்த்தினார். இது பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. [7]
கிலாபத் இயக்கத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்காக இந்தியா முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். கிலாபத் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்திற்கான நிதி சேகரிப்பில் அபாடி பானோ பேகம் முக்கிய பங்கு வகித்தார். இவர், மௌலானா அசரத் மோகானி மோகனியின் மனைவி பேகம் அசரத் மோகனி, பசந்தி தேவி, சரளாதேவி சௌதுராணி மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோருடன் பெண்கள் மட்டும் கூடும் கூட்டங்களில் அடிக்கடி உரையாற்றி, பால கங்காதர திலகர் அமைத்த திலக் சுவராஜ் நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பெண்களை அறிவுறுத்தினார். இந்திய சுதந்திர இயக்கத்திற்காக. [5] இவர் 1924 இல் இறக்கும் வரை சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்தார் [5]
அபாடி பானோ பேகம் 13 நவம்பர் 1924 அன்று 73 வயதில் இறந்தார். [1]
14 ஆகஸ்ட் 1990 அன்று, பாக்கித்தான் அஞ்சல் அலுவலகம் அதன் 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' தொடரில் இவரது நினைவாக ஒரு நினைவு அஞ்சல தலையை வெளியிட்டது. [1]