தோனா இசுட்டிரிக்குலாண்டு
தோனா இசுட்டிரிக்குலாண்டு (Donna Strickland, பிறப்பு: 27 மே 1959)[1][2][3] என்பவர் கனடிய ஒளி இயற்பியலாளரும் நோபல் விருதாளரும் ஆவார். மிகுந்த அடர்த்தியும் மிகக் குறைவான நீளமும் கொண்ட துடிப்புச் சீரொளி கற்றையை உருவாக்கியதற்காக, இவருக்கும் செரார் மூரு என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் மற்றைய அரைப்பங்கு ஆர்தர் ஆசுக்கின் என்பவருக்கு உயர்நுட்ப சீரொளி இடுக்கிகளைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.[4]
தோனா இசுட்டிரிக்குலாண்டு Donna Strickland | |
---|---|
பிறப்பு | தோனா தியோ இசுட்டிரிக்குலாண்டு 27 மே 1959 குவெல்ஃபு, கனடா |
துறை | இயற்பியல் ஒளியியல் சீரொளி |
பணியிடங்கள் | வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா |
கல்வி | மெக்மாசுடர் பல்கலைக்கழகம் (பிஎசு) இரோசெச்டர் பல்கலைக்கழகம் (எம்எசு, முனைவர்) |
ஆய்வேடு | மிகவும் ஒளிச்செறிவு கூடிய சீரொளி லேசர் உருவாக்கம், பல-போட்டான் அயனியாக்கத்திற்கான பயன்பாடு (1988) |
ஆய்வு நெறியாளர் | செரார் மூரு |
அறியப்படுவது | செறிந்த சீரொளி-பருப்பொருள் இடைவினைகள் நேரிலி ஒளியியல் குறுந்துடிப்பு செறிந்த சீரலைத் தொகுதிகள் ஊடுருவித் துடிப்புப் பெருக்கம் மிகைவேக ஒளியியல் |
விருதுகள் | அல்பிரடு சிலோன் ஆய்வு உதவி (1998) ஒளியியல் கழக ஆய்வாளர் (2008) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018) |
துணைவர் | டக் டைக்கார் |
பிள்ளைகள் | 2 |
இணையதளம் University website |
55 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பெண்ணான இவர், இந்தத் துறையில் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் ஆவார்.[5] தோனா தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தை மெக்மாசுடர் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இரோச்செசுடர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். தற்போது கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[6]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- தோனா இசுட்டிரிக்குலாண்டு publications indexed by Google Scholar