ஊசிப்புழு நோய்த் தொற்று

மாந்தர்களுக்கு நோயுண்டாக்கும் புழு

ஊசிப்புழு (Pinworm infection இது நூல்புழு நோய்த் தொற்று எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஊசிப்புழுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒட்டுண்ணி பீடிப்பு நோயாகும்.[3] மலவாயில் அரிப்புத் தோலழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும்.[1] இந்த நோய்த் தொற்று வந்தால் தூக்கமின்மை ஏற்படும்.[1] ஆனால் ஒரு சிலருக்கு இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை.[1]

ஊசிப்புழுத் தொற்று
ஒத்தசொற்கள்Enterobiasis, oxyuriasis[1]
ஊசிப்புழுவின் முட்டைகள் (Enterobius vermicularis)
சிறப்புதொற்றுநோய்
அறிகுறிகள்மலங்கழிவாயில் அரிப்புணர்வு[1]
வழமையான தொடக்கம்4 முதல் 8 கிழமைகள் வரையிலான தொடர்பு[2]
காரணங்கள்ஊசிப்புழு (Enterobius vermicularis)[3]
சூழிடர் காரணிகள்பள்ளிக்கூடம் செல்லுதல்[1]
நோயறிதல்புழுக்களையோ முட்டைகளையோ பார்த்தல்[1]
தடுப்புகைகழுவுதல், ஒவ்வொரு நாளும் காலையில் குளித்தல், நாள்தோறு உள்ளாடை மாற்றல்[1]
மருந்துMebendazole, pyrantel pamoate, or albendazole[4]
முன்கணிப்புமிகவும் கடியதன்று [5]
நிகழும் வீதம்பரவலாகக் காணக்கூடியது [1][5]

இந்த நோயானது ஊசிப்புழுவின் முட்டைகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.[1] இந்த முட்டைகள் துவக்கத்தில் மலவாய் அருகே தோன்றி சுமார் மூன்று வாரங்கள் வரை அங்கு உயிர்வாழ்கின்றன. பள்ளிக்கூடம் செல்பவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பணிபுரிபவர்கள் அல்லது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் போன்றோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.[1] ஆனால் மற்ற விலங்குகள் மூலமாக இந்த நோய்கள் பரவாது.[1] புழுவானது ஒரு செண்ட்டி மீட்டர் நீளத்திற்கு வந்த பிறகோ அல்லது நுண்நோக்கி மூலமாகவோ இதனைக் கண்டறியலாம்.[1][1]

பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்குப் பொருத்தவாறு மெபண்டசோல், பைடண்டல் பைமோட் அல்லது அல்பண்டசோல் ஆகிய மருந்துகளை இரண்டு பொழுதளவு இரண்டு வாரங்களுக்கு மருந்து கொடுக்கப்படலாம்.[4] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதே அளவிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.[1] சொந்த உடைமைகளை வெந்நீரில் வைத்து துவைக்க வேண்டும்.[1] நன்றாக கைகழுவுதல், நாள்தோறும் காலையில் குளித்தல், உள்ளாடைகளை தினமும் மாற்றுதல் ஆகியவை இந்த நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.[1]

ஊசிப்புழு நோய்த்தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது.[1][5] பொதுவாக இவ்வகையான நோய்த் தொற்று வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 20 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.[3] இது தீவிர நோய்த் தொற்றாகக் கருதப்படவில்லை.[5] இந்த நோய்த் தொற்று வரலாற்றின் பல காலங்களில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[6]

வரலாறு

வெள்ளைப்பூண்டு இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தாக இந்தியா, சீனா, எகிப்து மற்றும் கிரேக்கம் (நாடு) போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[7] இப்போக்கிரட்டீசு (459–370 கி.மு) நோயின் ஒட்டுண்ணிகளுக்கு மருந்தாக பூண்டினைக் குறிப்பிட்டுள்ளார்.[8] ஜெர்மனி தாவரவியலாளர் லானிசரஸ் (1564) நோய்த் தொற்றிற்கு பூண்டினை மருந்தாக குறிப்பிட்டுள்ளார்.[9] ஆனால் வெறும் வெள்ளைப் பூண்டினை தோலில் பயன்படுத்தினால் சருமப் பாதிப்புகள் ஏற்படும்.[10][11]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Brown MD (March 2006). "Images in clinical medicine. Enterobius vermicularis". The New England Journal of Medicine 354 (13): e12. doi:10.1056/NEJMicm040931. பப்மெட்:16571876. 

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்