முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அல்லது பல்லேகலை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Muttiah Muralitharan International Cricket Stadium) இலங்கையின் கண்டியில் புதியதாக உருவாக்கபட்டுள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். நவம்பர் 27, 2009 அன்று அரங்கம் திறக்கப்படடது. இது இலங்கையின் புகழ்பெற்ற துடுப்பாட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நினைவாக சூலை 2010 அன்று, மத்திய மாகாண அவையின் முழுமையான ஒப்புதலுடன், மறுபெயரிடப்பட்டது.[1]
பல்லேகலை | |||
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் கட்டப்படும்நிலையில். | |||
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | பல்லேகலை, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம் | ||
ஆள்கூறுகள் | 7°16′49″N 80°43′20″E / 7.28028°N 80.72222°E | ||
உருவாக்கம் | நவம்பர் 27, 2009 | ||
இருக்கைகள் | 35,000 | ||
உரிமையாளர் | இலங்கை துடுப்பாட்டம் | ||
இயக்குநர் | இலங்கை துடுப்பாட்டம் | ||
குத்தகையாளர் | மாகாணங்களிடை மட்டுப்படுத்திய துடுப்பாட்டடப் போட்டிகள் மாகாணங்களிடை இருபது20 போட்டிகள் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
உன்னசுகிரியா முனை ரிக்கில்லாகசுகடக முனை | |||
பன்னாட்டுத் தகவல் | |||
முதல் தேர்வு | திசம்பர் 1 2010: இலங்கை v மேற்கிந்தியத் தீவுகள் | ||
முதல் ஒநாப | 8 மார்ச் 2011: பாக்கித்தான் v நியூசிலாந்து | ||
அணித் தகவல் | |||
| |||
27 நவம்பர் 2010 இல் உள்ள தரவு மூலம்: Cricinfo |
இருப்பிடமும் பின்னணியும்
கண்டி நகரிலிருந்து அரைமணிநேரப் பயணத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.[2] பல்லேகல அரங்கம் முழுமையும் இலங்கைத் துடுப்பாட்டத்திற்கு உரிமையானதாம். 1983ஆம் ஆண்டு முதல் 2007 வரை பன்னாட்டுப் போட்டிகள் நடந்த அசுகிரிய அரங்கத்திற்கு மாற்றாக இது அமையும். அரங்கத்தை அரசு பொறியியல் நிறுவனம் (State Engineering Corporation of Sri Lanka) கட்டியுள்ளது. இதன் வடிவமைப்பு தென்னாபிரிக்காவில் உள்ள சென்சுரியன் சூப்பர்பார்க் அரங்கத்தை ஒத்துள்ளது.
இந்த அரங்கமும் அம்பாந்தோட்டை அரங்கமும் 2011 உலகக்கிண்ணப்போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டன. பல்லேகல கந்துரத துடுப்பாட்ட அணியின் அரங்கமும் ஆகும்.[3][4][5]
செய்தித்துளிகள்
- முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் திசம்பர் 2010இல்உலகின் 104வது தேர்வு அரங்கமாக ஆனது.[6] முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே திசம்பர் 1-5 வரை நடந்தது.
- இவ்விளையாட்டரங்கம் இலங்கையின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.
- புதிய அரங்கில் தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமை மேற்கிந்தியர் கிரிஸ் கெய்லை வெளியேற்றிய இலங்கையின் சுரங்க லக்மலுக்குக் கிடைத்தது. இவ்வாறு விக்கெட் வீழ்த்திய மற்ற இருவர்: இந்தியாவின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தானின் இம்ரான் கான் ஆவர்.[7]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.