முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்

முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அல்லது பல்லேகலை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Muttiah Muralitharan International Cricket Stadium) இலங்கையின் கண்டியில் புதியதாக உருவாக்கபட்டுள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். நவம்பர் 27, 2009 அன்று அரங்கம் திறக்கப்படடது. இது இலங்கையின் புகழ்பெற்ற துடுப்பாட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நினைவாக சூலை 2010 அன்று, மத்திய மாகாண அவையின் முழுமையான ஒப்புதலுடன், மறுபெயரிடப்பட்டது.[1]

முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
Muralitharan International Cricket Stadium
பல்லேகலை
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் கட்டப்படும்நிலையில்.
அரங்கத் தகவல்
அமைவிடம்பல்லேகலை, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம்
ஆள்கூறுகள்7°16′49″N 80°43′20″E / 7.28028°N 80.72222°E / 7.28028; 80.72222
உருவாக்கம்நவம்பர் 27, 2009
இருக்கைகள்35,000
உரிமையாளர்இலங்கை துடுப்பாட்டம்
இயக்குநர்இலங்கை துடுப்பாட்டம்
குத்தகையாளர்மாகாணங்களிடை மட்டுப்படுத்திய துடுப்பாட்டடப் போட்டிகள்
மாகாணங்களிடை இருபது20 போட்டிகள்
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
முடிவுகளின் பெயர்கள்
உன்னசுகிரியா முனை
ரிக்கில்லாகசுகடக முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வுதிசம்பர் 1 2010:
 இலங்கை v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒநாப8 மார்ச் 2011:
 பாக்கித்தான் v  நியூசிலாந்து
அணித் தகவல்
கந்துரத துடுப்பாட்ட அணி(2009 – நடப்பில்)
27 நவம்பர் 2010 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

இருப்பிடமும் பின்னணியும்

கண்டி நகரிலிருந்து அரைமணிநேரப் பயணத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.[2] பல்லேகல அரங்கம் முழுமையும் இலங்கைத் துடுப்பாட்டத்திற்கு உரிமையானதாம். 1983ஆம் ஆண்டு முதல் 2007 வரை பன்னாட்டுப் போட்டிகள் நடந்த அசுகிரிய அரங்கத்திற்கு மாற்றாக இது அமையும். அரங்கத்தை அரசு பொறியியல் நிறுவனம் (State Engineering Corporation of Sri Lanka) கட்டியுள்ளது. இதன் வடிவமைப்பு தென்னாபிரிக்காவில் உள்ள சென்சுரியன் சூப்பர்பார்க் அரங்கத்தை ஒத்துள்ளது.

இந்த அரங்கமும் அம்பாந்தோட்டை அரங்கமும் 2011 உலகக்கிண்ணப்போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டன. பல்லேகல கந்துரத துடுப்பாட்ட அணியின் அரங்கமும் ஆகும்.[3][4][5]

செய்தித்துளிகள்

  • முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் திசம்பர் 2010இல்உலகின் 104வது தேர்வு அரங்கமாக ஆனது.[6] முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே திசம்பர் 1-5 வரை நடந்தது.
  • இவ்விளையாட்டரங்கம் இலங்கையின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.
  • புதிய அரங்கில் தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமை மேற்கிந்தியர் கிரிஸ் கெய்லை வெளியேற்றிய இலங்கையின் சுரங்க லக்மலுக்குக் கிடைத்தது. இவ்வாறு விக்கெட் வீழ்த்திய மற்ற இருவர்: இந்தியாவின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தானின் இம்ரான் கான் ஆவர்.[7]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்