விஜய் ருபானி
விஜய் ருபானி (Vijay Rupani (பிறப்பு 1956 ஆகத்து 2) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 2016 ஆகத்து 7 முதல் 2021 செப்டம்பர் 12 வரை இருந்தவர்.[2] இவர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் மேற்கு ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.[3]
விஜய் ருபானி | |
---|---|
16வது குஜராத் முதலமைச்சர் | |
பதவியில் 7 ஆகத்து 2016 – 12 செப்டம்பர் 2021 | |
முன்னையவர் | ஆனந்திபென் படேல் |
பின்னவர் | புபேந்திர படேல் |
தொகுதி | ராஜ்கோட் மேற்கு |
சட்டமன்ற உறுப்பினர் Member for ராஜ்கோட் மேற்கு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 அக்டோபர் 2014 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை, குஜராத் மாநிலத்தில் இருந்து | |
பதவியில் 2006–2012 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஆகத்து 1956[1] யங்கோன், பர்மா[1] |
தேசியம் | இந்தியக் குடிமகன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அஞ்சலி ருபானி |
பிள்ளைகள் | ஒரு மகன் ஒரு மகள் |
பெற்றோர் | ராம்னிகால், மாயாபென் |
வாழிடம் | ராஜ்கோட் |
வேலை | அரசியல்வாதி |
மந்திரி சபை | குஜராத் அரசு |
உடைமைத்திரட்டு | அமைச்ர் - போக்குவரத்து, குடிநீர் வழங்கல், தொழிலாளர் நலத்துறை (நவம்பர் 2014 - ஆகத்து 2016) |
துவக்கக்கால வாழ்க்கை
விஜய் ருபானி 1956 ஆகத்து 2 அன்று[3] பர்மாவின் ரங்கூனில் பணியா சமூகத்தில் பிறந்தவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.[4][5] பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இவர் குடும்பம் பர்மாவிலிருந்து 1960 இல் ராஜ்கோட்டிற்கு இடம் பெயர்ந்தது. இவர் தன் இளங்கலைப் பட்டத்தை தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் முடித்து சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.[1][3][6][7]
வாழ்க்கை
இவர் மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். 1971 ஆம் அப்போதைய பாரதிய ஜனதாவான ஜனசங்கத்தில் இந்தார். நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்தபோது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1987 ராஜ்கோட் நகராட்சிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1996 ஆம் ராஜ்கோட்டிற்கு மேயர் ஆனார். 2006 இல் இவர் குஜராத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக மோடியால் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஆனந்திபென் அமைச்சரவையில் 2015 நவம்பரில் அமைச்சரான ருபானி பதவியேற்ற ஐந்து மாதங்களில் குஜராத் மாநில பாஜக தலைவராக ஆனார்.
முதலமைச்சர் (2016-2021)
இவர் ஆனந்திபென் படேலுக்குப் பின் குஜராத்தின் முதலமைச்சராக 2016 ஆம் ஆண்டு 7 ஆம் திகதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9][10][11]