ஹால்மிடி
ஹால்மிடி (Halmidi) என்பது இந்திய மாநிலாமன கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கோயில் நகரமான பேளூர் அருகே உள்ளது. கன்னட மொழியில் பிரத்தியேகமாக அறியப்பட்ட பண்டைய இந்தியக் கல்வெட்டுகளான, 'ஹால்மிடி கல்வெட்டு' கண்டுபிடிக்கப்பட்ட இடமாக இந்த ஊர் அறியப்படுகிறது. இதற்கு முன்னால், கன்னட சொற்களைக் கொண்ட பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது அசோகரின் பொ.ச. 230-ன் பிரம்மகிரி கட்டளை இருப்பினும், இதுவே கன்னடத்தின் முதல் முழு நீள கல்வெட்டாகும்.[1][2] இந்தக் கல்வெட்டு பொதுவாக 'ஹால்மிடி கல்வெட்டு' என்று அழைக்கப்படுகிறது. மேலும்,மணற்கல் அடுக்கில் செதுக்கப்பட்ட பதினாறு வரிகளைக் கொண்டுள்ளது. இது பொ.ச. 450க்கு தேதியிட்டது. மேலும், கன்னடம் அந்தக் காலத்தில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.[3] இந்தக் கல்வெட்டு பழமையான கன்னடத்தில் பழைய கன்னடத்தின் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. பிராமி எழுத்துக்களைப் போன்ற கன்னட எழுத்து வடிவத்தையும் பயன்படுத்துகிறது.[2]
ஹால்மிடி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°14′41″N 75°49′14″E / 13.244833°N 75.820683°E | |
நாடு | இந்தியா |
State | கருநாடகம் |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ |
இணையதளம் | karnataka |
சிக்மகளூர் நகரத்துக்கும் பேளூர் நகரத்துக்கும் இடையில் ஹால்மிடி கிராமம் அமைந்துள்ளது. கல்வெட்டின் கலாச்சார முக்கியத்துவத்தையும், அதன் பாதுகாப்பில் ஹால்மிடி கிராமம் ஆற்றிய பங்கையும் அங்கீகரிக்கும் வகையில், கர்நாடக அரசு கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.5 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. மேலும், அசல் கல்வெட்டின் ஒரு கண்ணாடியிழை பிளாஸ்ட்டிக்குப் பிரதி ஒன்றை வைக்க ஒரு மண்டபத்தையும் உருவாக்கியட்கு. தற்போது அரசு, வரலாற்று ஆர்வமுள்ள இடமாக கிராமத்தை ஊக்குவிக்கவும் தொடங்கியுள்ளது.