2017 கூனேரு தொடர்வண்டி விபத்து
கூனேரு தொடர்வண்டி விபத்து அல்லது ஹிராக்கந்த் தொடர்வண்டி விபத்து என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் கூனேரு ரயில் நிலையம் அருகே 21 சனவரி 2017 இரவு ஹிராக்கந்த் அதிவிரைவுத் தொடர்வண்டி தடம் புரண்ட விபத்தை குறிப்பாதாகும்.[2]
ஹிராக்கந்த் தொடர்வண்டி வழித்தடம் | |
தேதி | 21 சனவரி 2017 |
---|---|
நேரம் | 11:00 இரவு. உள்ளூர் நேரம் 21 சனவரி) |
இடம் | கூனேரு,ஆந்திரப்பிரதேசம் |
ஆள்கூறுகள் | 18°57′59″N 83°26′25″E / 18.96639°N 83.44028°E |
நாடு | இந்தியா |
வழித்தடம் | ஜர்சுக்டா–விஜயநகரம் வழி |
இயக்குநர் | கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் |
விபத்தின் வகை | தடம் புரண்ட சம்பவங்கள் |
காரணம் | விசாரணையில் உள்ளது. |
புள்ளிவிவரம் | |
புகைவண்டிகள் | 1 |
பயணிகள் | ~600 |
இறப்பு | 42[1] |
காயம் | 68 |
விபத்து
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று கொண்டிருந்த ஹிராக்கந்த் அதிவிரைவுத் தொடர்வண்டி, ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் கூனேரு ரயில் நிலையம் அருகே 21 சனவரி 2017 இரவு தடம் புரண்டது.[3] மூன்று பெட்டிகள் முற்றிலும் இருப்புப்பாதையை விட்டு தடம் புரண்டன.[4] சில பெட்டிகள் அருகில் இணையாக சென்று கொண்டிருந்த சரக்கு வண்டியுடன் மோதி புரண்டன.[5]
அதிவிரைவுத் தொடர்வண்டியின் பொறி இயந்திரம் உட்பட 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பின்னர் இறந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.[1]
இழப்பீடு
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய இரயில்வே சார்பில் தலா ரூ.2 லட்சமும் ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.[1]