கர்ப்ப உபநிடதம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
கர்ப்பம் | |
---|---|
தேவநாகரி | गर्भ |
உபநிடத வகை | சாமான்யம், உடலியல் |
தொடர்பான வேதம் | யசுர் வேதம்,[1] அதர்வண வேதம்[2] |
பாடல்களின் எண்ணிக்கை | அறியப்படவில்லை, சில கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையவில்லை |
அடிப்படைத் தத்துவம் | வேதாந்தம் [2] |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு இந்து நூல்கள் |
கர்ப்ப உபநிடதம் (Garbha Upanishad) [3] ), அல்லது கர்போபநிடதம் ( Garbhopaniṣad ) என்பது சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது 108 இந்து உபநிடத நூல்களின் நவீன தொகுப்பில் 17-வது இடத்தில் உள்ளது. சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இதை சில அறிஞர்கள் யசுர்வேதத்துடன் தொடர்புடையது என்றும்[1]பிறர் அதர்வண வேதத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.[2] இது 35 சாமான்ய (பொது) உபநிடதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] உபநிடதத்தின் கடைசி வசனம் பிப்பலாத முனிவருக்கு உரையைக் காணிக்கையாக்குகிறது. ஆனால் உரையின் காலவரிசை மற்றும் ஆசிரியர் பற்றி தெளிவில்லை. மேலும் எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் சேதமடைந்துள்ளன. ஒன்றுக்கொன்று பொருந்தாதவை மற்றும் முழுமையற்றவையாக இருக்கின்றன. [5] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் போன்ற பலரும் "உடலியல் அல்லது மருத்துவம் பற்றிய கையேடு" என்கின்றனர். [3]
மனித வாழ்க்கையின் கரு முதல் வயதுவந்த நிலை வரை மனித உடற்கூறியல் தொடர்பான ஒப்பீட்டு அளவைக் கணக்கிடுவதற்கும் வழங்குவதற்கும் இது குறிப்பிடத்தக்கது. [6][7] மேலும், மனித உடல் என்றால் என்ன?,[8][9] மனித கரு எவ்வாறு உருவாகிறது?,[10] [11][7] கரு எவ்வாறு உருவாகிறது?,[9][12] கருவுக்கு என்ன தெரியும்?,[11][13]கர்ப்பத்தில் கரு எவ்வாறு கற்றுக்கொள்கிறது?,[14] பிறப்புக்குப் பிறகான வளர்ச்சி[15]என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது.
கர்ப்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் "கருப்பை" தொடர்பானது.[16]
எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையாமல் காணப்படுகின்றனர். பெரும்பாலான வாசகங்கள் தொலைந்துவிட்டன அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளும் சீரற்றதாக உள்ளது. [7] ஒரு அத்தியாயத்தில் நான்கு உரைநடைப் பகுதிகளைக் கொண்ட கொல்கத்தா கையெழுத்துப் பிரதி மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பாகும். [7] [11]