அப்துல் ரசாக் உசேன்
துன் அப்துல் ரசாக் உசேன்; (மார்ச் 12, 1922 — ஜனவரி 14, 1976), (மலாய்: Tun Haji Abdul Razak bin Dato' Hussein; ஆங்கிலம்: Tun Abdul Razak Hussein; சீனம்: 阿卜杜勒·拉扎克); என்பவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர்.
அப்துல் ரசாக் உசேன் | |
---|---|
இரண்டாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1970 செப்டம்பர் 22 – 1976 ஜனவரி 14 | |
ஆட்சியாளர்கள் | யாஹ்யா பெத்ரா கிளாந்தான் அகமட் ஷா பகாங் |
Deputy | துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் உசேன் ஓன் |
முன்னையவர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்னவர் | உசேன் ஓன் |
மலேசியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22 | |
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்னவர் | இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெக்கான், பகாங், மலாயா (இப்போது மலேசியா) | 11 மார்ச்சு 1922
இறப்பு | 14 சனவரி 1976 லண்டன், இங்கிலாந்து | (அகவை 53)
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (1953–1976) தொழிலாளர் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
துணைவர் | ரஹா நோ (Rahah Noah) |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை) |
தொழில் | வழக்குரைஞர் |
1970-ஆம் ஆண்டில் இருந்து 1976-ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியை வகித்தவர். மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை (Father of Development), (மலாய்: Bapa Pembangunan) என்று போற்றப் படுகிறவர்.
இவர் ஆட்சியில் இருந்த போது, மலேசியாவில் இருந்த பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, பாரிசான் நேசனல் எனும் ஆளும் கூட்டணியை அமைத்தவர். மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கையை (Malaysian New Economic Policy) அறிமுகப் படுத்தியவர்.[1]
வாழ்க்கை வரலாறு
இவர் பகாங் மாநில அரச நகரமான பெக்கான் நகரில், புலாவ் கெலாடி எனும் கிராமத்தில் 1922 பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தவர்.
அப்துல் ரசாக், கோலாகங்சார் மலாய்க் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் 1939-ஆம் ஆண்டில் மலாயா நிர்வாகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, 1940-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ராபிள்ஸ் கல்லூரியில் படிக்க அவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்துடன் அவரின் கல்லூரிப் படிப்பு நிறுத்தப் பட்டது. போர்க் காலத்தில் அவர் பகாங் மாநிலத்தில் வத்தானியா (Wataniah) எதிர்ப்பு இயக்கத்தை அமைக்க உதவினார்.
மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கை
மலேசியாவில் வாழும் பல இன மக்களின் பொருளாதார, சமூகவியலைச் சமப்படுத்தும் வகையில் 1971-ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியவர்.[2]
புறநகர் வாழ்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வறுமை நிலையை அகற்றுவதற்கும், 1974-ஆம் ஆண்டு மலேசிய பச்சைப் புத்தகத் திட்டத்தைத் தொடங்கியவர்.
மலேசியாவில் பெல்டா, பெல்க்ரா திட்டங்களை அறிமுகப் படுத்தியவர். கிராமப் புறங்களிலும், உட்புறப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நல்சேவைகளை வழங்கியவர் என்று புகழப் படுகின்றார்.[3]