இரண்டாம் நெபுகாத்நேசர்
நேபுகாத்னேச்சர் அல்லது நெபுகத்நேசர் II (Nebuchadnezzar II), கிமு 642 – கிமு 562) புது பாபிலோனியப் பேரரசின் தலைசிறந்த, மிக நீண்ட காலப் பேரரசராக விளங்கியவர்.[2] இவர் கிமு 587-இல் எருசலேம் நகரையும், யூதக் கோயிலையும் அழித்தவர். இஷ்தர் பெண் கடவுளுக்கு அழகிய கோயில் எழுப்பினார். இவா் பாபிலோன் நகரை மீண்டும் பொழிவுடன் கட்டி எழுப்பி, " தொங்கும் தோட்டம்" அமைத்தார்.[3]
நபூ-குதுரி-உசூர் Nabû-kudurri-usur | |
---|---|
புது பாபிலோனியப் பேரரசர் | |
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னரின் தலை பொறிக்கப்பட்ட ஒரு வேலைப்பாடு. அன்டன் நீசுட்ரோம், 1901.[1] | |
ஆட்சி | அண். கிமு 605 – அண். கிமு 562 |
முன்னிருந்தவர் | நபோபலசார் |
பின்வந்தவர் | ஆமெல்-மர்தூக் |
தந்தை | நபோபலசார் |
பிறப்பு | அண். கிமு 642 |
இறப்பு | அண். கிமு 562 (அகவை 71/72) |
நெபுகாத்நேசா் தனது தலைநகரில் அமைத்த கட்டிடங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்ட அனைத்து வகையான கட்டிட அமைப்புகளும் திட்டமிட்டு சுமார் 16 கிமீ சுற்றளவில் இரண்டு சுவர்களுக்கு இடையே பிரமாண்டமான இஷ்தர் கோயில் நுழைவாயில் அமைத்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட நகரமாக நிறுவினார். இவர் மேலும் ஒரு பெரிய அழகான புகழ்பெற்ற அரண்மனையை கட்டினார். அது, தி மார்வெல் ஆப் தி மேன்கைண்ட்[தெளிவுபடுத்துக] என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர் பாரசீக வளைகுடாவில் ஒரு கப்பல் துறைமுகத்தை முதன்முதலில் அமைத்து உலகப்புகழ் பெற்றாா்.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
- Freedman, David Noel (2000). "Nebuchadnezzar". in Freedman, David Noel; Myers, Allen C.. Eerdmans Dictionary of the Bible. Eerdmans. https://books.google.com.kh/books?id=qRtUqxkB7wkC&pg=PA953&dq=%22King+of+Babylon+for+43+years%22&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMImeu4gIvsxwIVhROmCh35XAtF#v=onepage&q=%22King%20of%20Babylon%20for%2043%20years%22&f=false.