இளங்கோவடிகள்
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள், தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர்.இவர் சேர மரபைச் சார்ந்தவரென சிலப்பதிகார பதிகம் கூறுகிறது.[1]
இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,[2]சைவக் கொற்றவையையும் [3]போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்பந்துங் கழங்குந் தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்பூவும் புகையும் மேவிய விரையும்ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வரஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇவிலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்திஇணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் இத்தகைய இரத்தபலி பூசை ஏற்கும் கொற்றவை எங்கனம் சைவ சமய தெய்வமாகும்