கோட்டிபுவா

கோட்டிபுவா (Gotipua); என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். மேலும் ஒடிசி என்ற செவ்வியல் நடனத்தின் முன்னோடியாகும். [1] இது பல நூற்றாண்டுகளாக ஒரிசாவில் இளம் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெகந்நாதர் மற்றும் கிருஷ்ணனைப் புகழ்ந்து பாடுவதற்காக பெண்களின் ஆடை அணிந்து நடன வடிவங்களை நிகழ்த்துவர் . ராதா மற்றும் கிருஷ்ணாவின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் குழுவால் கழைக்கூத்து வடிவில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. சிறுவர்கள் அவர்களின் இரு பால் கூறுகளையும் ஒருங்கே பெற்றிருக்கிற தோற்றம் மாறும் முன்பே அதாவது பதின்ம வயதிற்கு முன்பே இளம் வயதிலேயே நடனத்தைக் கற்கத் தொடங்குகிறார்கள . ஒடியா மொழியில் கோட்டி புவா என்றால், "ஒற்றை சிறுவன்"என்று பொருள். அதாவது பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறுவன் என்பது பொருள்.[1] ஆயினும் இது பல சிறுவர்கள் கொண்ட குழுவாகவே நிகழ்த்தப்படுகிறது. ஒடிசாவில் பூரிக்கு அருகில் உள்ள ரகுராஜ்பூர் என்ற சிற்றூர் கோட்டிபுவா நடன குழுக்களுக்கு பெயர் பெற்ற ஒரு வரலாற்று கிராமமாகும்.

ஒடிசா பூரியில் ஓர் நட்சத்திர விடுதியில் கோட்டிபுவா நடனம்
ரகுராஜ்பூரில் கோட்டிபுவா நடனம்

நடனக் கலைஞர்கள்

நடனக்கலைஞர்களாக தயாராகும் சிறுவர்கள் அழகான பெண் நடனக் கலைஞர்களாக மாறவேண்டி தங்களின் தலைமுடியை வெட்டுவதில்லை, அதற்கு பதிலாக அவர்கள் அதை ஒரு முடிச்சிட்டும், பின்னலிட்டுபூச்சரங்கள் சூடிக் கொள்ளவும் செய்கிறார்கள். வெள்ளையும் சிவப்புமான கலவைப்பொடியைக் கொண்டு அவர்கள் முகங்களை ஒப்பனை செய்துகொள்கிறார்கள். காஜல் எனப்படும் கருப்பு மையைக் கண்களைச் சுற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் கண்கள் நீளமான தோற்றத்தைப் பெறுகிறது. பொதுவாக வட்டமான பொட்டு, நெற்றியில் இடப்படுகிறது, அந்தப் பொட்டினைச் சுற்றி சந்தன மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கலவை அணியப்படுகிறது. பாரம்பரிய வண்ண ஓவியங்கள் முகத்தை அலங்கரிக்கின்றன. அவை ஒவ்வொரு நடனப் பள்ளிக்கும் தனித்துவமானவையாகும். எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஒரு கோட்டிபுவா நடனக்கலஞர் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கலாம். [2]

இந்நடனத்திற்கான ஆடை காலப்போக்கில் மாற்றம் பெற்று வந்துள்ளது. கோட்டிபுவாவிற்கென அனியப்படும் பாரம்பரிய உடை காஞ்சூலா எனப்படுகிறது. இது பளபளப்பான பிரகாசமான வண்ண அலங்காரங்களுடன் கூடிய இரவிக்கை, இடுப்பைச் சுற்றி கட்டப்படும் ஒரு காப்புடை போன்ற, பூ வேலைப்படுகள் உள்ள நிபி பந்தா என்றழைக்கப்படும் உடை, மேலும் கால்களைச் சுற்றி அணிவதற்காக குஞ்சங்கள் அல்லது சுருக்குகள் வைத்த உடை நடனத்தின்பொழுது அணியப்படுமகிறது. சில நடனக் கலைஞர்கள் பட்டா சாரி எனப்படும் 4 மீ நீளமுள்ள, இருபுறமும் சம நீளமுள்ள ஒரு பொருளிலும் தொப்புளிலும் முடிச்சிட்டு அணியப்படும் மெல்லிய துண்டுத்துணியை அணிவர். இதனை அணிவதன் மூலம் இன்னும் இதன் முந்தைய பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இருப்பினும், இந்த பாரம்பரிய உடை பெரும்பாலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு ஆயத்த ஆடையாகவும் உள்ளது. இது அணிய எளிதானது.

நடனக் கலைஞர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, மணிகளால் ஆன நகைகளை அணிந்துகொள்கிறார்கள்: கழுத்தணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் காது ஆபரணங்கள். மூக்கணிகள். கால்களால் தட்டப்படும் தாளத் துடிப்புகளை அதிகரிக்க கொலுசுகள் ஆகியவை அணியப்படுகின்றன. உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் ஆல்டா எனப்படும் சிவப்பு திரவத்தால் வண்னங்கள் வரையப்படுகின்றன. இந்நடனத்தில் அணியப்படும் ஆடை, நகைகள் மற்றும் மணிகள் புனிதமாகக் கருதப்படுகின்றன.

வரலாறு

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரிசாவில் உள்ள கோயில்களில் தேவதாசிகள் (அல்லது மஹாரி ) என்று அழைக்கப்படும் பெண் நடனக் கலைஞர்கள் இருந்தனர், அவர்கள் ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள். அவர்கள் மகரி நடனத்தை ஆடி வழிபட்டு வந்தனர். ஒரிசாவில் உள்ள கோயில்களில் குறிப்பாக பூரியில் உள்ள கோனார்க் சூரியக் கோவில், மற்றும் புரி ஜெகன்னாதர் கோயில் போன்றவற்றில் நடனக் கலைஞர்களின் சிற்பங்கள் இந்த பண்டைய மகரி நடனப் பாரம்பரியத்தை நிரூபிக்கின்றன. போய் வம்சத்தை நிறுவிய ராம சந்திர தேவ் ஆட்சியின் போது 16 ஆம் நூற்றாண்டில் மஹரி நடனக் கலை வீழ்ச்சியடைந்தது. அதே சமயம் சிறுவர் நடனக் கலைஞர்கள் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர். கோட்டிபுவா நடனம் ஒடிஸி நடன பாணியில் உள்ளது. ஆனால் அவற்றின் நுட்பம், உடைகள் மற்றும் விளக்கக்காட்சி ஆகியவை மஹரிகளிடமிருந்து வேறுபடுகின்றன; பாடல் நடனக் கலைஞர்களால் பாடப்படுகிறது. இன்றைய ஒடிஸி நடனத்தில் கோட்டிபுவா நடனத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. ஏனெனில் கேளுச்சரண மகோபாத்திரா போன்ற ஒடிசி நடனக்கலைஞர்களில் பலர் தங்கள் இளம்வயதில் கோட்டிபுவா நடனக் கலைஞர்களாக இருந்தவர்களாவார்கள்.

ஒடிஸி நடனம் என்பது தாண்டவம் (வீரியம், ஆண்பால்) லாஸ்யம் (அழகான, பெண்பால்) என்ற நடனங்களின் கலவையாகும். இது இரண்டு அடிப்படை தோரணைகளைக் கொண்டுள்ளது: திரிபாங்கி (இதில் உடல் தலை, கால் மற்றும் உடல்பகுதி வளைவுகள் உண்டு) மற்றும் சௌகா(ஜெகந்நாத்தை குறிக்கும் ஒரு சதுர வடிவ நிலைப்பாடு). மேல் உடற்பகுதியில் உள்ள திரவம் ஒடிஸி நடனத்தின் சிறப்பியல்பு ஆகும், இது பெரும்பாலும் ஒரிசா கடற்கரைகளை ஈர்க்கும் மென்மையான கடல் அலைகளுடன் ஒப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், குரு கேளுச்சரண மகோபாத்திரா ஒடிஸி ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரில் கோட்டிபுவா நடன விழாவை ஏற்பாடு செய்கிறது. [2]

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், ஒடிசா சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவருமான மகுனி சரண் தாஸ், கோட்டிபுவா நடனத்தில் திறம்பெற்ற ஒருவராவார். [3]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோட்டிபுவா&oldid=3242125" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை