சோ. தர்மன்
சோ. தர்மன் (Cho. Dharman, பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். [4] 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர்.
சோ. தர்மன் | |
---|---|
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023) | |
பிறப்பு | சோ. தர்மராஜ்[1] 8 ஆகத்து 1953 உருளைகுடி, கோவில்பட்டி, தமிழ்நாடு |
பணி | சிறுகதை எழுத்தாளர் |
பெற்றோர் | சோலையப்பன் பொன்னுத்தாய் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2019)[2][3] |
பிறப்பு
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[4] ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பூமணி அவர்களின் மருமகன் இவர். சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர்.
நூல்கள்
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.[4]
புதினம்
- கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [4][5]
- சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
- தூர்வை (2017)
- பதிமூனாவது மையவாடி (2020)
சிறுகதைத்தொகுதிகள்
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி (2019)
- நீர்ப்பழி
வாழ்க்கை வரலாறு
- வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
விருதுகள்
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[6]
- சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப்பெற்றார். [7][8]
- தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019.