மகிழ்கலை
மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுகின்றது. கதைகூறல், நடனம், இசை, தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.[1]
மகிழ்கலைகள் நிகழ்ச்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம்.
குழந்தைகள்
குழந்தைகளின் பொழுதுபோக்கு விளையாட்டை மையமாகக் கொண்டது மற்றும் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு வழங்கப்படுகிறது அல்லது பெரியவர்களால் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது, மேலும் பொம்மலாட்டங்கள், கோமாளிகள் மற்றும் கேலிச் சித்திரம் போன்ற பல செயல்களும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களால் அனுபவிக்கப்படுகின்றன.[2][3]
தமிழர் பண்பாட்டில் 2000ஆம் ஆண்டு வரை சிறுவர்களின் பொழுது போக்கு கதை கேட்டல், கிட்டிப் புள்ளு, அணில் பிள்ளை, கிளித்தட்டு, ஓடி விளையாடுதல், தாயக் கட்டை, எறிபந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தமது பொழுது போக்கை களித்தனர். தற்பொழுது பெரும்பாலுமான சிறுவர்கள் தொலைக்காட்சி, இசை மற்றும் கணினி போன்றவற்றுடன் தமது பொழுது போக்கை அனுபவிக்கின்றனர்.
மகிழ்கலை அம்சங்கள்
- கதை கூறுதல்
- நடனம் ஆடுதல்
- விளையாடுதல்
- வாசித்தல்
- ஓடுதல்
- தற்காப்பு கலை கற்றல்
- தொலைக்காட்ச்சி பார்த்தல்
- இசை கேட்டல்
- பாடுதல்
- கணினி விளையாட்டு
- இணைய விளையாட்டு
- படம் வரைதல்
- எழுதல்
- இரு சக்கரவண்டி ஓடுதல்
- கைவண்ண பொருட்கள் செய்தல்
- சமைத்தல்
- காணொளி உருவாக்கல்
- இசை உருவாக்கல்
- திரையரங்கு செல்லுதல்
- பொருட்கள் வாங்க செல்லுதல்