ராமேச்சாப் மாவட்டம்
ராமேச்சாப் மாவட்டம் (Ramechhap District) (நேபாளி: रामेछाप जिल्लाⓘ), தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டில் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்துள்ளது. இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மந்தலி நகரம் ஆகும்.
ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,546 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராமேச்சாப் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,02,646 ஆகும். [1] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 137.4 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் குசுந்தா இன மக்கள் தொகை அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2] இம்மாவட்டத்தில் நேபாள மொழி, சுனுவார் மொழி, தாமாங் மொழி, நேவாரி மொழி மற்றும் ஹாயு மொழிகள் பேசப்படுகிறது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் இமயமலை வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [3]
கிராம வளர்ச்சி மன்றங்கள்
ராமேச்சாப் மாவட்டம் நாற்பத்தி ஆறு கிராமிய நகராட்சிகளும், மந்தலி மற்றும் ராமேச்சாப் என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- மாவட்ட இணையதளம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ramechhap