விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் தமிழ் இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது. 2010 முதல் அளிக்கப்படுகின்றது. பொதுவாக அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்விருதின் நோக்கம். விருது ரூபாய் ஐம்பதாயிரமும் நினைவுப்பரிசு கேடயமும் அடங்கியது. 2013 முதல் விருதுத்தொகை ஒருலட்சமாக உயர்த்தப்பட்டது. விஷ்ணுபுரம் அமைப்பின் சிற்பமும் பரிசாக அளிக்கப்படுகிறது.
விஷ்ணுபுரம் விருது | |
---|---|
தேதி | 2010 |
Location | கோவை |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் |
வெகுமதி(கள்) | ரூ 50,000 பணமுடிப்பு & கேடயம் ( 2013 முதல் ரூ. ஒரு லட்சம் ) |
முதலில் வழங்கப்பட்டது | 2010 |
இணையதளம் | https://vishnupuramvattam.in/ |
பரிசுபெறும் படைப்பாளியைப் பற்றி ஒரு நூல் பரிசுவிழாவில் வெளியிடப்படுகிறது. பரிசுபெறுபவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்படும். பரிசுபெறும்படைப்பாளியைப்பற்றிய விரிவான இருநாள் கருத்தரங்கும் விவாதங்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் ஒரு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விருது பெற்றவர்கள்
- 2010 - ஆ. மாதவன்[1][2]
- 2011 - பூமணி[3]
- 2012 - கவிஞர் தேவதேவன்[4][5]
- 2013 - தெளிவத்தை ஜோசப்[6]
- 2014 - கவிஞர் ஞானக்கூத்தன்[7]
- 2015 - கவிஞர் தேவதச்சன்[8]
- 2016 - வண்ணதாசன்[9]
- 2017 - சீ. முத்துசாமி[10]
- 2018 - பேராசிரியர் ராஜ் கௌதமன்[11]
- 2019 - கவிஞர் அபி[12]
- 2020 - சுரேஷ்குமார இந்திரஜித்[13]
- 2021 - கவிஞர் விக்ரமாதித்யன்[14][15][16]
- 2022 - சாரு நிவேதிதா[17]
- 2023 - யுவன் சந்திரசேகர்[18]
விழாக்கள்
விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாக்கள் இலக்கியவாசகர்கள் கூடும் கொண்டாட்டங்களாக நிகழ்த்தப்படுகின்றன விழாவிற்கு முதல்நாளே வாசகர்கள் கூடுவார்கள். வாசகர்களும் எழுத்தாளர்களும் வருவார்கள். மூத்த எழுத்தாளர்களுடன் சந்திப்பும் உரையாடலும் தொடர்ச்சியாக நிகழும்
- 2010 சிறப்பு விருந்தினர்கள்- இயக்குநர் மணிரத்னம், மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, தலைமை கோவை ஞானி. சிறப்புரை நாஞ்சில் நாடன்,வேதசகாயகுமார் [26-12-2010][19]
- 2011 சிறப்புவிருந்தினர்கள் - இயக்குநர் பாரதிராஜா,கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் , தலைமை கோவை ஞானி, சிறப்புரை எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் [18-12-2011][20]
- 2012 சிறப்பு விருந்தினர்கள் - இசையமைப்பாளர் இளையராஜா, மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன், சுகா, ராஜகோபாலன்,க.மோகனரங்கன் [22-12-2012]
- 2013 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, இயக்குநர் பாலா, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் , கவிஞர் ரவிசுப்ரமணியன்,சுரேஷ் [22-12-2013]
- 2014 சிறப்பு விருந்தினர்கள் - இயக்குநர் வசந்தபாலன், மலையாள எழுத்தாளர் டி.பி.ராஜீவன், கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை (விழா 2014 காணொளிகள் - 28-12-2014)
- 2015 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், இயக்குநர் வெற்றிமாறன், லட்சுமி மணிவண்ணன், ஜோ.டி.குரூஸ்
- 2016 சிறப்பு விருந்தினர்கள் - கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாசர், மருத்துவர் கு.சிவராமன்[தொடர்பிழந்த இணைப்பு], இரா.முருகன், பவா செல்லத்துரை
- 2017 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத், மலேசிய எழுத்தாளர் ம.நவீன்
- 2018 சிறப்பு விருந்தினர்கள் - வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையாள எழுத்தாளர் மதுபால், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி
- 2019 சிறப்பு விருந்தினர்கள் - மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா, பெருந்தேவி, ரவி சுப்ரமணியம்
- 2021 சிறப்பு விருந்தினர்கள் - ஜெய்ராம் ரமேஷ், சின்ன வீரபத்ருடு, வசந்த் சாய், சோ. தர்மன்
நூல்கள்
- கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு
- பூக்கும் கருவேலம் - பூமணியின் புனைவுலகு
- ஒளியாலானது - தேவதேவன் படைப்புலகம்
- அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி
- தாமிராபரணம் - வண்ணதாசனின் புனைவுலகு
- ராஜ்கௌதமன் - பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல் நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.[21]
ஆவணப்படங்கள்
- இலைமேல் எழுத்து - ஞானக்கூத்தன் ஆவணப்படம்
- நிசப்தத்தின் சப்தம் - தேவதச்சன் ஆவணப்படம்
- நதியின்பாடல் - வண்ணதாசன் ஆவணப்படம்
- ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன் - சீ முத்துசாமி ஆவணப்படம்
- பாட்டும் தொகையும் - ராஜ் கௌதமன் ஆவணப்படம்
- அந்தரநடை - அபி ஆவணப்படம்
- தற்செயல்களின் வரைபடம் - சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்
புகைப்படத்தொகுப்புகள்
- வருடம் 2010 - விருது பெற்றவர்: ஆ. மாதவன் - படங்கள்
- வருடம் 2011 - விருது பெற்றவர்: பூமணி - படங்கள்
- வருடம் 2012 - விருது பெற்றவர்: தேவதேவன் - படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- வருடம் 2013 - விருது பெற்றவர்: தெளிவத்தை ஜோசப் - படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- வருடம் 2014 - விருது பெற்றவர்: ஞானக்கூத்தன் -
- வருடம் 2015 - விருது பெற்றவர்: தேவதச்சன் - படங்கள்
- வருடம் 2016 - விருது பெற்றவர்: வண்ணதாசன் - படங்கள்
- வருடம்2017 - விருதுபெற்றவர் சீ.முத்துசாமி - காணொளிகள்
- வருடம் 2018 - விருதுபெற்றவர் ராஜ்கௌதமன் - காணொளிகள்
- வருடம் 2019 - விருதுபெற்றவர் அபி