ஆற்றுக் கழிமுகம்

ஆற்றுப் படுகை (river delta) என்பது ஆற்றின் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வண்டல் மண்ணை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அதன் வேகம் குறைந்து படிய வைப்பதால் உருவாகும் ஒரு நிலவமைப்பு ஆகும்.[1][2]

சேக்ரமெண்டோ (கலிஃபோர்னியா) ஆற்றுக் கழிமுகம், 2009 மார்ச் 2009 தொடக்கத்தில்

உருவாக்கம்

ஆறுகள் ஓடும்போது மண், மணல், குப்பைக் கூளங்கள் முதலியவற்றை அடித்துக்கொண்டு செல்லும். ஆறு கடலிலோ ஏரியிலோ கலக்கும்போது அதன் வேகம் குறைந்துவிடும். அப்பொழுது மண்ணும் மணலும் அங்கு படிந்துவிடுகின்றன. மண் படிந்து கொண்டே இருப்பதால் நாளடைவில் அங்கு ஒரு படுகை உண்டாகிறது.

பெயர்க்காரணம்

ஆற்றின் இரு கிளைகளுக்கும் கடலுக்கும் இடையில் இப்படுகை ஒரு முக்கோண வடிவில் அமையும். இதற்குக் ஆற்றுப் படுகை (டெல்ட்டா)(Delta) என்று பெயர். டெல்ட்டா என்ற கிரேக்க எழுத்து முக்கோண வடிவில் இருக்கும். இதையொட்டி இதற்கு இப்பெயர் வந்தது.

பண்புகள்

ஆற்றின் நடுவே இப்படுகை வளர்ந்து நீரோட்டத்தைத் தடை செய்வதால் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது. மக்கள் குடியிருப்பதற்கு இது பாதுகாப்பான இடமாகாது. ஏனெனில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் கிளையாறுகள் இடம்விட்டு இடம் மாறிவிடுவது உண்டு. ஆறு கடலில் கலக்குமிடத்தில் அதன் வேகம் அதிகமாக இருந்தால், கழிமுகப் படுகை அமையாது.[3]

வண்டல் மண்

கழிமுகத் தீவில் படிந்துள்ள மண்ணுக்கு வண்டல் மண் என்று பெயர். இது வளம் நிறைந்தது. இப்படுகைகளில் பயிர் மிகச் செழிப்பாக வளரும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆற்றுக்_கழிமுகம்&oldid=3738158" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை