இரண்டு இலை உள்ள மரம்
வெல்விட்சியா '(Welwitschia)' எனும் ஒற்றைத் தாவர இனமுள்ள பேரினம் ஆகும். இந்த பூக்கும் தாவரப் பேரினத்தின் ஒரேயொரு இனமான வெல்விட்சியா மிராபிலிசு '(Welwitschia mirabilis)' நமீபியாவிலும் அங்கோலவிலும் அமையும் நமீபு பாலநில அச்சுறுத்தல் இனமாகும்.நீட்டோபைட்ட பிரிவு, வெவிட்சியாசியேல்சு வரிசையில் வெவிட்சியாசியே மட்டுமே உயிர்வாழும் பேரினமாகும், நீட்டோபைட்டா பிரிவில் உயிர்வாழும் மூன்று பேரினங்களாக, வெல்விட்சியா, நீட்டம், எபெடிரா ஆகியன அமைகின்றன. இது பொதுவாக "உயிர்வாழும் தொல்லுயிர் எச்சம்" என வழங்குகிறது.[3][4]
இரண்டு இலை உள்ள மரம் | |
---|---|
"பெரும் வெல்விட்சியா " என வழங்கும் மிகப் பெரிய வெல்விட்சியா 1.4 மீ (4.6 அடி) உயரமும் 4 மீ (13 அடி) யைவிட கூடுத்லான விட்டமும் கொண்ட மரமாக நிற்கிறது. | |
CITES Appendix II (CITES)[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | வெல்விட்சியா |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/வெல்விட்சியாவ. mirabilis |
இருசொற் பெயரீடு | |
வ mirabilis ஃஊக்.எஃப்f. | |
Welwitschia பரவல். | |
வேறு பெயர்கள் [2] | |
|
வகைப்பாடு
தாவரவியல் பெயர்:வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia mirabilis)
குடும்பம் :நீட்டேசியீ (Gnetaceae)
மற்ற பெயர்கள்
தும்போ மரம்(Tree Tumbo)
மரத்தின் அமைவு
இது மிகச் சிறிய மரம் ஆகும். இது தரையிலிருந்து சிறிது மட்டுமே மேல் நோக்கி வளர்ந்துவரும் மரமாகும் . பார்ப்பதற்கு மிகவும் விந்தைமிகும் தோற்றம் கொண்டுள்ளது. தண்டுப்பகுதி சில சமயங்களில் 14 அடி சுற்றளவு கொண்டிருக்கும். இவற்றிலிருந்து இரண்டு இலைகள் மட்டுமே வளர்ந்து உள்ளன. இவ்விலைகள் 20 அடி (6.5மீ) நீளத்திற்கும், 20 செ.மீ அகலத்திற்கும் இருக்கும். இவை தரையை ஒட்டியே கிடக்கும். இவ்விலைகள் சதைப்பற்றுடனும், தோல் வார் போன்று தடிப்பாகவும் இருக்கும். இலையின் நுனி இரண்டாக பிளவுபட்டு இருக்கும். மரத்தின் நடுவிலிருந்து பெண் கூம்பு மலர்கள் 5 செ.மீ. நீளத்திற்கு பச்சை நிறத்துடனும், ஆண் கூம்பு மலர்கள் 3 செ.மீ. நீளத்திற்கு பழுப்பு நிறத்துடனும் இருக்கும். இதன் வேர் 200 அடிகள் வரை நீண்டுக் காணப்படுகிறது.
பரவல் பகுதிகள்
இம்மரம் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பாலைவனப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.[5] இவற்றின் இலைகளில் பனித்துளி இரவில் தனித்து காணப்படுகிறது. இவற்றின் இலைகளில் பனித்துளி இரவு நேரங்களில் படிவதால் சில உயிரினங்கள் இங்கு குடியேறுகின்றன.
சிறப்புகள்
இம்மரத்தில் இரண்டு இலைகள் மட்டுமே உள்ளது. தன்னுடைய ஆயுள் காலம் முழுவதும் இரண்டு இலைகள் மட்டுமே கொண்டுள்ளது. இவ்விலைகள் 5-8 செ.மீ. மட்டுமே ஒராண்டில் வளர்கின்றன. இம்மரம் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறது. இத்தாவரம் இருக்கும் இடங்களில் ஆண்டுக்கு,ஏறத்தாழ ஓர் அங்குலத்திற்கும் குறைவான மழையேப் பொழிகிறது.
மேற்கோள்
| 1 || சிறியதும் - பெரியதும் [6] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001