உலகக் கலை நாள்
உலகக் கலை நாள் (World Art Day) என்பது நுண்கலைகளின் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாள் ஆகும், இது பன்னாட்டுக் கலைச் சங்கத்தால் (IAA) உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான கலைச் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.[1][2]
மெக்சிக்கோவில் குவாதலகாராவில் அமைந்துள்ள பன்னாட்டுக் கலைச் சங்கத்தின் 17வது பொதுச் சபையில் ஏப்ரல் 15-ஆம் நாளை உலகக் கலை நாளாக அறிவிக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டது, முதல் கொண்டாட்டம் 2012 இல் நடைபெற்றது. இந்த முன்மொழிவிற்கு துருக்கிய ஓவியர் பெத்ரி பாய்க்காம் புரவலராக இருந்தார். இம்முன்மொழிவு பொதுச் சபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][3][4]
லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்விற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. உலக அமைதி, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், பல்லினப்பண்பாடு மற்றும் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][4]
உலகக் கலைக் கலை நாள் இணைய வழியிலும், முக்கியமாக கூகுள் கலைச் செயல்திட்டம் போன்றவை மூலம், முன்னெடுக்கப்படுகிறது.[5]
2012 ஏப்ரல் 15 அன்று நடந்த முதல் உலகக் கலை நாள், அனைத்து கலைச் சங்கத் தேசியக் குழுக்களாலும், பிரான்சு, சுவீடன், சிலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, சைப்பிரசு, வெனிசுவேலா உட்பட்ட உலக நாடுகளின் 150 கலைஞர்களாலும் ஆதரிக்கப்பட்டது.[1][3][4]