கோத்துகள்
கோத்துகள் என்பவர்கள் ஒரு செருமானிய மக்கள் ஆவர். மேற்கு ரோமானிய பேரரசு வீழ்ச்சியடைந்ததில் இவர்கள் முக்கிய பங்காற்றினர். நடுக்கால ஐரோப்பாவின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தனர்.[1][2] தன் புத்தகமான கோத்திகாவில் கோத்துகள் தெற்கு இசுக்காண்டினேவியாவில் இருந்து வந்தனர் என சோர்டனேசு குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தெளிவான குறிப்பா என்பதில் குழப்பம் நிலவுகிறது. [1]குடோனெசு என்ற மக்களைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. இவர்கள் ஆரம்பகால கோத்துகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் தென்பகுதி விசுதுலா ஆற்றுக்கு அருகில் இவர்கள் வசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வியேல்பார்க் கலாசாரத்துடன் இவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.[1][3] 2ஆம் நூற்றாண்டில் இருந்து வியேல்பார்க் கலாசாரமானது தெற்கு நோக்கி கருங்கடலை நோக்கி விரிவடைந்தது. இது கோத்துகளின் இடம்பெயர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 3ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செர்னியகோவ் கலாசாரம் உருவாக இது பங்களித்தது.[1][4]