சரளா தாசன்

சரளா தாசன் (Sarala Dasan) இவர் 15 ஆம் நூற்றாண்டின் கவிஞரும் ஒடியா இலக்கிய அறிஞருமாவார். மகாபாரதம் விலங்க ராமாயணம் மற்றும் சண்டி புராணம் ஆகிய மூன்று ஒடியா புத்தகங்களுக்கு மிகவும் பிரபலமானவர். [1]இதை ஒடியாவில் எழுதிய முதல் அறிஞருமாவார். ஒடியா இலக்கியத்தைத் தோற்றுவித்தவர் என்ற வகையில், இவரது படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கான ஒரு நீடித்த தகவலை உருவாக்கியுள்ளன.

சரளா தாசன்
பிறப்புசித்தேசுவர பரிதா
15ஆம் நூற்றாண்டு
தென்துலிபதா, ஜகத்சிம்மபூர் மாவட்டம்
இறப்புமகா சுக்லா சப்தாமி
பணிகவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சரளா மகாபாரதம்

வாழ்க்கை

சரளா தாசனின் வாழ்க்கை தெளிவற்றது. இந்திய மாநிலமான ஒடியாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள சித்திகேத்திரங்களில் ஒன்றான கனகபுரா என்று அழைக்கப்படும் கனகவதி படானாவில் பிறந்தார். இவர் பிறந்த தேதியை துல்லியமாக தீர்மானிக்க முடியாது என்றாலும், இவரை கி.பி 15 ஆம் நூற்றாண்டில் வைக்க முடியும்.

சரளா தாசனுக்கு முறையான ஆரம்பக் கல்வி இல்லை. சுய கல்வியின் மூலம் இவர் அடைந்த காரியம், பக்தி மற்றும் உத்வேகத்தின் தெய்வமான சரளாவின் கிருபையால் கூறப்பட்டது. இவரது ஆரம்ப பெயர் சித்தேசுவர பரிதா என்றாலும், பின்னர் இவர் சரளா தாசன் அல்லது ' சரளாவின் வரத்தால் ' அறியப்பட்டார். ( தாசன் என்ற தலைப்பு ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது தெய்வத்தின் அடிமை அல்லது வேலைக்காரன் என்று பொருள். சரளா தாசனுக்கு முன்னும் பின்னும் வந்த கவிஞர்களின் நீண்ட பட்டியலில் இந்த வழியில் முடிவடையும் பெயர்கள் உள்ளன. உதாரணமாக: வத்ரா தாசன், மார்க்கந்தா தாசன், சரளா தாசன், ஜெகந்நாத தாசன், பலராம தாசன், மற்றும் யசோவந்த தாசன். ) சரசுவதி தெய்வம் உதவி செய்யும் வரை ஆரம்பகால வாழ்க்கையில் கல்வியறிவற்றவர் எனக் கூறப்படும் காளிதாசன் போன்ற பிற இந்தியக் கவிஞர்களைப் போன்ற கதைகள் இவருக்கும் உண்டு. சித்தேசுவரன் ஒரு சிறுவனாக ஒரு காலத்தில் தனது தந்தையின் வயலை உழுது கொண்டும், பாடிக்கொண்டும் இருந்ததாகக் கூறுகிறது. அழகான கவிதைகளை இயற்றுவதற்கான சக்தியை இவருக்கு சரளா வழங்கினார்.

ஒடியாவின் கஜபதி மன்னரின் இராணுவத்தில் இவர் ஒரு சிப்பாயாக பணியாற்றினார் என்பதற்கு அவரது மகாபாரதத்தில் பல அறிகுறிகள் உள்ளன.

சரளா தாசன் தனது கடைசி நேரத்தை பிலா சரளாவில் கழித்தார். ஆனால் தென்தூலியபாடாவில் கனகபுரா என்று அழைக்கப்படும் கனகவதி படனா, முனிகோஸ்வைன் என்று அழைக்கப்படும் ஒரு மத ஸ்தாபனத்துடன் பாரம்பரிய இடமாகக் குறிக்கிறது. அங்கு இவர் தனது படைப்புகளை இயற்றினார். இவரது வாழ்நாளின் இந்த காலம் இடைக்காலம் என்று அழைக்கப்பட்டது.

படைப்புகள்

மகாபாரதம், விலங்க ராமாயணம் மற்றும் சண்டி புராணம் - சரளா தாசன் ஆகிய மூன்று புத்தகங்களுக்கும் இவர் மிகவும் பிரபலமானவர். லட்சுமி நாராயண வச்சனிகா புத்தகத்தையும் எழுதினார். ஆதி பர்வ மகாபாரதம் புரியின் கடவுள் சகந்நாதருக்கு உரையாற்றிய ஒரு நீண்ட அழைப்போடு திறக்கிறது. இதிலிருந்து சரளா தாசன் தனது மகாபாரதத்தை கபிலேஸ்வரரின் காலத்தில் எழுதத் தொடங்கினார். ।[2]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

About Sarala das mahabharat

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சரளா_தாசன்&oldid=3243209" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை