சிறுமுது அறிஞர்
சிறுமுது அறிஞர் (child prodigy) என்போர் சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர் ஆவர். [1]அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை சிறுமுது அறிஞர் என்று சொல்லலாம் என ஒரு வரையறை கூறுகிறது.[1][2]
பரவலர் ஊடகங்களில் இத்தகைய திறன் உடையோரை அதிசயக் குழந்தை அல்லது சாகசக் குழந்தை என்று கூறுவர்.
இசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ ஆகியோர் சிறுமுது அறிஞர்கள் ஆவர். [3]அதுமட்டுமன்றி இவர்கள் பெரியவர்கள் ஆன பின்னும் தங்கள் திறமையைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் பெரும்பாலான சிறுமுது அறிஞர்கள் காலம் செல்லச் செல்ல தங்கள் திறமையை இழந்து விடுவதும் உண்டு.
திருஞானசம்பந்தர் போன்ற தமிழ்ப் புலவர் பலரும் சிறுமுது அறிஞராய்த் திகழ்ந்தனர்.