ஜேம்சு புரூக்

சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்

சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.

ஜேம்சு புரூக்
James Brooke
வெள்ளை இராஜா
ஆட்சிக்காலம்18 ஆகஸ்டு 1842
11 சூன் 1868
மலேசியா18 ஆகஸ்டு 1842
முன்னையவர்1. சுல்தான் தெங்கா சரவாக்
(Sultan Tengah)
2. பெங்கிரான் இந்திரா மக்கோத்தா முகமது சாலே
Pengiran Indera Mahkota Mohammad Salleh
பின்னையவர்சார்லசு புரூக்
பிறப்பு(1803-04-29)29 ஏப்ரல் 1803
ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம்
இறப்பு11 சூன் 1868(1868-06-11) (அகவை 65)
ஐக்கிய இராச்சியம்
வாழ்க்கைத் துணைகள்பெங்கீரான் அனாக் பத்திமா
(Pengiran Anak Fatima)
குழந்தைகளின்
பெயர்கள்
1 மகள்
மரபுபுரூக் வம்சாவழி
தந்தைதோமசு புரூக்
தாய்அன்னா மரியா
மதம்கிறிஸ்துவம்

சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.

வரலாறு

இந்தியாவில் கம்பெனி ஆட்சி (Company Raj) நடைபெற்ற போது மேற்கு வங்காளம், ஹூக்லி மாவட்டத்தில் ஜேம்சு புரூக் பிறந்தார்.[1]

இங்கிலாந்தில் சில வருடங்கள் கல்வி கற்ற பிறகு, 1819-ஆம் ஆண்டில், வங்காள இராணுவத்தில் (Bengal Army) பணியாற்றினார். 1825-ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் மிக மோசமாகக் காயமடைந்தார்.

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

இந்தப் போர் பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போராகும். ஜேம்ஸ் புரூக் உடனடியாக இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டார்.

1830-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் மீண்டும் சென்னைக்கு வந்தார். ஆனால் பழைய இராணுவப் பிரிவில் மீண்டும் சேர மிகவும் தாமதமாகி விட்டது. பின்னர் தன் இராணுவ வேலையை ராஜினாமா செய்தார். மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கே திரும்பினார்.

தூரக்கிழக்குப் பயணம்

ஜேம்சு புரூக்
கூச்சிங்கில் ஜேம்சு புரூக் மாளிகை - 1848
புரூணை அரண்மனையில் 18 டிசம்பர் 1846-ஆம் தேதி; ஜேம்சு புரூக் - புரூணை சுல்தான் பேச்சுவார்த்தை.

இடையில், தான் ஒரு வணிகராக வேண்டும் என விருப்பப் பட்டார். தூரக்கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய முயற்சிகள் செய்தார். பலன் அளிக்கவில்லை.

1835-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையார் இறந்ததும் வாரிசு சொத்து என £30,000 பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் 142-டன் எடை கொண்ட ஒரு கப்பலை வாங்கினார். அந்தக் கப்பலின் பெயர் ராயலிஸ்ட் (Royalist).[2]

புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன்

1838-ஆம் ஆண்டில் போர்னியோ தீவில் கூச்சிங்க் நகரை வந்தடைந்தார். அப்போது புரூணை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சிகள் போர்னியோவில் பரவலாக இருந்தன. அந்த எதிர்ப்புகளை சமாதான முறையில் தீர்த்து வைக்கலாம் என ஜேம்ஸ் புரூக் விரும்பினார்.

புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமை (Pangeran Muda Hashim) கூச்சிங்கில் சந்தித்தார். கிளர்ச்சியை நசுக்க உதவினார். இதன் மூலம் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். சுல்தான் உமர் அலி சைபுதீன் II; புருணையின் 23-ஆவது சுல்தான் ஆவார். இவர் 1841-இல் புரூக் செய்த உதவிக்கு ஈடாக சரவாக்கின் கவர்னர் பதவியை புரூக்கிற்கு வழங்கினார்.

புரூணை மலாய் பிரபுக்கள்

அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார். இருப்பினும், அப்போது புரூணையில் இருந்த மலாய் பிரபுக்கள் சிலர், திருட்டுக்கு எதிரான புரூக்கின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவை அவர்களுக்குப் பாதகமாக இருந்தன.

புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமையும் (Pangeran Muda Hashim) மற்றும் அவரின் ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, ஜேம்சு புரூக் அந்த முயற்சியை அடக்கினார். புரூணை ஆட்சியைச் சுல்தான் உமர் அலி சைபுதீனிடமே (Omar Ali Saifuddin II) மீட்டுக் கொடுத்தார்.

லபுவான் ஆளுநராக ஜேம்சு புரூக்

1842-ஆம் ஆண்டில், சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். 1842 ஆகஸ்டு 18-ஆம் தேதி சரவாக் ராஜா என்ற பட்டம் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டது.

1844-இல் ஜேம்சு புரூக், தன் மேற்பார்வையில் இருந்த லபுவான் தீவை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கினார். 1848-இல் ஜேம்சு புரூக், லபுவானின் ஆளுநராகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

ஜேம்சு புரூக்கிற்குச் சட்டப்படியாக முறையான திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப் படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் அவருக்கு ஒரு மகன் இருந்ததாகவும் தெரிய வருகிறது. மனைவியின் அடையாளம் அல்லது மகனின் அடையாளம்; அல்லது அவர்களின் பிறந்த தேதிகள் தெளிவாகக் கிடைக்கப் பெறவில்லை.[3]

இருப்பினும் மகனின் பெயர் ரூபன் ஜார்ஜ் வாக்கர் (Reuben George Walker) என்றும்; அந்தப் பெயர் ஜார்ஜ் புரூக் (George Brooke) என மாற்றம் கண்டதாகவும் சொல்லப் படுகிறது.[4]

பெங்கீரான் அனாக் பத்திமா

ஆனாலும் ஜேம்சு புரூக்கிற்கு முஸ்லீம் முறைப்படி ஒரு முறை திருமணம் நடைபெற்று உள்ளது. புரூணை நாட்டைச் சேர்ந்த பெண்மணி பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) என்பவரை முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் (1874-1953) (Francis William Douglas) என்பவர், நவம்பர் 1913 முதல் சனவரி 1915 வரை, புரூணை மற்றும் லபுவான் பகுதிகளின் துணை ஆளுநராக (Acting Resident for Brunei and Labuan) பணி செய்தவர். அவர் 19 ஜூலை 1915-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்தத் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[5]

ஜேம்சு புரூக்கிற்குப் பிறந்த மகள்

பெங்கீரான் அனாக் அப்துல் காதிர் (Pengiran Anak Abdul Kadir) என்பவரின் மகளும், புருணையின் 21-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலாம் (Sultan Muhammad Kanzul Alam) என்பவரின் பேத்தி பெங்கீரான் அனாக் பத்திமா. இந்தத் திருமணம் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது.

இந்தத் திருமணத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 1864-இல் பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் என்பவரால் இந்தப் பெண்மணி, நேர்காணல் புரூக்கின் மகள் செய்யப் பட்டார். அத்துடன் மருத்துவர் டாக்டர் ஓகில்வி (Dr Ogilvie) என்பவர் புரூக்கின் மகளை 1866-இல் சந்தித்ததாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் டக்ளஸ் குறிப்பிட்டு உள்ளார்.[6]

வாரிசு

ஜேம்சு புரூக்கிற்கு முறையான பிள்ளைகள் இல்லாததால், 1861-இல் அவர் தன் சகோதரியின் மூத்த மகனான கேப்டன் ஜோன் புரூக் ஜான்சன் புரூக் (Captain John Brooke Johnson Brooke) என்பவரைத் தன் வாரிசாகப் நியமித்தார்.

இருப்பினும் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரிசு பட்டியலில் இருந்து ஜோன் புரூக் தவிர்க்கப் பட்டார். இவருக்குப் பதிலாக, இவரின் ஜோன் புரூக்கின் இளைய சகோதரர், சார்லஸ் அந்தோனி ஜான்சன் புரூக் என்பவரைத் தன் வாரிசாக நியமித்தார்.

இறப்பு

ஜேம்சு புரூக்கின், இறுதி கட்டத்தின் பத்து ஆண்டுகளில், மூன்று முறை பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டார். 1868-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர், டெவன்சையர் (Dartmoor, Devonshire) நகரில் இறந்தார். செயிண்ட் லியோனர்ட் தேவாலயத்தின் (St Leonard's Church) கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டார்.

வெள்ளை இராஜா வம்சாவழியினர்

பெயர்தோற்றம்பிறப்புஇறப்பு
ஜேம்சு புரூக்
(1841–1868)
29 ஏப்ரல் 1803, இந்தியா11 ஜூன் 1868, இங்கிலாந்து
ஜோன் புரூக்
Rajah Muda of Sarawak
(1859–1863)
1823, இங்கிலாந்து1 டிசம்பர் 1868, இங்கிலாந்து
சார்லசு புரூக்
(1868–1917)
3 ஜுன் 1829, இங்கிலாந்து17 மே 1917, இங்கிலாந்து
சார்ல்சு வைனர் புரூக்
(1917–1946)
26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து9 மே 1963, இங்கிலாந்து
பெர்த்திராம் புரூக்
Tuan Muda of Sarawak
(1917–1946)
8 ஆகஸ்டு 1876, சரவாக்15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து
அந்தோனி புரூக்
Rajah Muda of Sarawak
(1939–1946)
10 டிசம்பர் 1912, இங்கிலாந்து2 மார்ச் 2011, நியூசிலாந்து

பொது

1840-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; சாதாரண புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக வெள்ளை இராஜா எனும் அடைமொழி பயன்படுத்தப்பட்டது.

ஜேம்சு புரூக் என்பவர் அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார்.[2]

புரூணை சுல்தானகம்

கூச்சிங்கிற்கு அருகில் புரூக் நினைவகம்

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.

ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறை புருணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

பொதுச்சேவை சீர்த்திருத்தங்கள்

பிரித்தானிய அரசாங்க நிர்வாக அமைப்பைப் போல சரவாக் அரசாங்க நிர்வாகத்தையும் ஜேம்சு புரூக் மறுசீரமைத்தார். இறுதியில் சரவாக அரசாங்கத்தில் ஒரு பொதுச் சேவையையும் உருவாக்கினார்.

ஐரோப்பிய அதிகாரிகளை, குறிப்பாக பிரித்தானிய அதிகாரிகளை மாவட்டத்தின் வெளிமாநிலங்களை நிர்வகிப்பதற்கு நியமித்தார். இராஜா ஜேம்சு புரூக் மற்றும் அவரின் வாரிசுகளால், சரவாக் பொதுச் சேவைத் துறை தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது.

புரூக் குடும்பம்

ஜேம்சு புரூக்
புரூக் குடும்பம்
பிறப்பு: 29 ஏப்ரல் 1803 இறப்பு: 11 சூன் 1868
ஆட்சியின் போது இருந்த பட்டம்
புதிய பட்டம்
வெள்ளை இராஜா
1842–1868
பின்னர்
அரசு பதவிகள்
முன்னர்
புதிதாக உருவாக்கப்பட்டது
லபுவான் ஆளுநர்
1848–1852
பின்னர்
ஜார்ஜ் வாரன் எட்வர்ட்

சான்றுகள்

மேலும் படிக்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
James Brooke, Rajah of Sarawak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜேம்சு_புரூக்&oldid=3902577" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை