தெருவோரக் குழந்தை
தெருக் குழந்தை அல்லது தெருவோரக் குழந்தை (Street children) என்பவர், தங்குவதற்கு வீடின்றி நகர அல்லது கிராமத்து தெருக்களில் வாழும் குழந்தையைக் குறிக்கும். யூனிசெப்பின் வரையறைப்படி, பெரியவர்களின் கண்காணிப்பும் பாதுகாப்புமின்றி தெருவில் வாழும் அல்லது தெருவையே வாழ்வாதாரமாகக் கொண்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் தெருவோரக் குழந்தைகள் ஆவர்.[1]
வளர்ந்த நாடுகளில் தெருவோரக் குழந்தைகளில் சிலர் வீட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளானவர்களாக உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.[2] தெருவோரக் குழந்தைகள் நிந்தனை, புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் சிலசமயங்களில் கொலைக்கும் உள்ளாகின்றனர்.[3] மேற்கத்திய நாடுகளில் இவ்வகைக் குழந்தைகள் குற்றவாளிகளாக அல்லது பிச்சைக்காரர்களாகக் கருதப்படுவதைக் காட்டிலும் வீடற்ற குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர்.