நாணயம்

நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து நாணயங்கள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன.

உலகின் சில நாணயங்கள்.

பண்டைய கால தமிழர் நாணயங்கள் வரலாறு

அரச மரபினர் பயன்படுத்திய நாணயங்கள்

தமிழகத்தில் பல்வேறு அரச மரபினர்கள் பயன்படுத்திய நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டன. அவ்வகை நாணயங்கள் அக்கம், மாடை, கழஞ்சு, அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என அழைக்கப்பட்டன.

தமிழ் இலக்கியங்களில்

தமிழக மன்னர்கள் புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும், ஆற்றுப்படை நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு புலவர்களும், பாணர்களும் அரசனை வாழ்த்திக் கூறும்போது அவர்களுக்கு மன்னர்களால் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்களுடன் பொற்காசுகளும் வழங்கப்பட்டுள்ளன. [1]

சங்க காலம்

காசுகள் சங்க காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் காணப்பட்டு வந்துள்ளன. சங்க கால அரசர் காலத்தில் வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. இந்நாணயங்களில் கழஞ்சு என்பது சங்க காலத்தில் எடுத்தலளவையாகப் பயன்படுத்தப்பட்டன. சங்க கால அரசர் காலத்தில் வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. பிற்காலத்தில் நாணயங்கள் அளவான கழஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை கல்வெட்டினால் அறியலாம். சங்க காலத்தில் ரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான வியாபாரம் நடைபெற்றதற்குச் சான்றாக ரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.[2]. தமிழகத்தில் கிடைத்த காசுகளில் திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. இது திண்ணன், சேந்தன் என்ற சங்க காலப் பெயர்களைத் தாங்கியுள்ளன. சேந்தன் என்பவர் பற்றி அகநானூற்றுப் பாடலில் அறிய முடிகிறது.[1].

வடிவம்

சதுரமாக வெளியிடப்பட்ட காசுகளில் மரம் (தரு), யானை, திருமறு (ஸ்ரீவத்சம்) முதலிய வடிவங்கள் பொறிக்கப்பட்டன. இக்காசு வட இந்தியாவில் புராணா எனவும், தென்னிந்தியாவில் காணம் எனவும் வழங்கப்பட்டன. [1]

உலக நாணயங்கள் வரலாறு

ஆரம்ப கால நாணயங்கள்

சோகிகளைப் பணமாகப் பயன்படுத்தும் அரபு வணிகர்

கி.மு. 2000 இல் நடந்த இரண்டு அடிப்படை கண்டுபிடிப்புகளில் இருந்து நாணயம் உருவானது. முதலில் பண்டைய மெசொப்பொத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலும், பின்னர் பண்டைய எகிப்திலும் கோவில் வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில் முதலில் பணம் என்பது ரசீதாக கிடைத்தது.

நாணயத்தின் முதல் கட்டத்தில், பொருட்களின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உலோகங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன. இது 1500 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வரும் செழிப்பான வர்த்தகத்தின் அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், அண்மைய கிழக்கு வர்த்தக அமைப்பின் சரிவு ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டியது: ஒரு காலகட்டத்தில், மதிப்பைச் சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் இல்லை, சுழற்சியடையும் ஊடகத்தின் மதிப்பு, அந்த அங்காடியைப் பாதுகாத்துள்ள படைகள் போல் அமைந்து இருக்கும். அந்த இராணுவப் படைகளின் நம்பகத்தன்மை இருக்கும் இடம் வரைக்குமே வர்த்தகம் சென்றடைய முடியும் என்றிருந்தது. வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில், கிழக்கு நடுநிலம் (மத்தியதரைக்கடலுக்குக் கிழக்காக உள்ள நாடுகள்) முழுவதும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல ஒப்பந்தங்கள் இடப்பட்டன. இவை வடமேற்கில் மினோவன், கிரீட் மற்றும் மைசீன் (Mycenae) போன்ற இடங்களிலிருந்து, தென்கிழக்கில் ஈலாம் மற்றும் பகுரைன் ஆகிய இடங்கள்வரை பரவியிருந்தன. இந்த வணிகப் பரிமாற்றங்களில் என்ன வகையான நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியாமல் இருந்தாலும், இவை சைப்ரஸில் உற்பத்தி செய்யப்பட்ட, எருது போன்ற விலங்குகளின் தோல் அமைப்பை ஒத்த, இங்காட்கள் என்று அழைக்கப்படும் செப்பு நாணயங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடல் கொள்ளை, மற்றும் வெண்கலக்கால வீழ்ச்சி தொடர்பான திடீர்ச் சோதனைகள் அதிகரிப்பு இங்காட்கள் நாணய அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. கி.மு 10ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் வந்த போனீசியா வணிகம் மீண்டும் உலோக நாணயங்களையும், செழிப்பையும் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து கிரேக்க, பின்னர் பேர்சியன் நாணயங்கள் உருவாகின. ஆப்பிரிக்காவில், மணிகள் (beads), இங்காட்கள், தந்தம், பல்வேறு வகையான ஆயுதங்கள், கால்நடைகள், மணிலா நாணயம், மற்றும் ஓச்சர் மற்றும் பிற நில ஆக்சைட்டுக்கள் உட்பட பல வகையான மதிப்புக்கள் நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 15 ஆம் நூற்றாண்டில் இருந்து அடிமைகளை விற்கும்போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களில், மேற்கு ஆப்பிரிக்காவின் மணிலா வளையங்களும் இருந்தன. ஆபிரிக்க நாணயங்கள் தற்போதும் அதன் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. உலகின் சில இடங்களில் தற்போதும் சில இடங்களில் பண்டமாற்று முறையும் நடைமுறையில் உள்ளது[3].

நாணயக்காலம்

இந்தக் காலகட்டத்தில், உலோகமானது (முதலில் வெள்ளி, பிறகு ஒரே சமயத்தில் வெள்ளியும் தங்கமும், ஒரு காலத்தில் வெண்கலம்) மதிப்பை நிர்ணயிக்கும் நாணயமானது.

இப்போது நாம் செம்பு உலோகம் மற்றும் விலைமதிப்புக் குறைந்த உலோகங்கள் ஆகியவற்றை நாணயங்களாகக் கொண்டிருக்கிறோம். உலோகம் வெட்டப்பட்டு, எடையிடப்பட்டு, நாணயங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. நாணயத்தை எடுத்துக் கொள்ளும் தனிமனிதன் ஒரு குறிப்பிட்ட எடையில் விலைமதிப்பற்ற உலோகத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாக உறுதி செய்ய வேண்டும். கள்ள நாணயங்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் வழிமுறையை உருவாக்கினர். இது வங்கி அமைப்புக்கள் உருவாக உதவின. ஆர்க்கிமிடீசு தத்துவம் அடுத்த ஒரு முறையை உருவாக்கியது. நாணயங்கள் இப்போது இலகுவான முறையில் உலோகத்தின் அளவையிட்டுச் சோதிக்கப்படலாம். இதனால் நாணயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவற்றின் உண்மையான மதிப்பை தீர்மானிக்க முடியும்.

நாணயத்தைப் பயன்படுத்தும் மிகப்பெரும் பொருளாதாரங்கள் பல செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆன நாணயங்களைக் கொண்டிருந்தன. பெரிய கொள்முதல், இராணுவம் மற்றும் அரச நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றிற்குத் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை பெரும்பாலும் பொருள் சார்ந்ததாக அன்றி, கணக்கின் அளவீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி நாணயங்கள் நடுத்தர பரிமாற்றங்களுக்கும், வரி, கட்டணம், ஒப்பந்தங்கள் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கான கணக்கின் அலகாகவும் பயன்படுத்தப்பட்டன. செம்பு, வெள்ளி, அல்லது பல உலோக கலவைகளால் செய்த நாணயங்கள் ஆகியவற்றை தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த முறை மகாஜனபாடர்களின் காலத்திலிருந்து பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. மூன்று உலோகங்களின் மதிப்பில் சரியான விகிதம் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஸ்பெயினின் வெற்றிக்குப் பிறகு புதிய உலகில் வெள்ளி அதிகரித்தது போல, மத்திய ஐரோப்பாவின் ஹார்ஸ் (Harz) மலைகளில் வெள்ளி சுரங்கங்கள் திறக்கப்பட்டு வெள்ளி அதிகளவில் பெறப்பட்டபோது, வெள்ளியின் மதிப்புக் குறைந்தது. இருப்பினும், அரிதாகக் கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு வெள்ளியைவிட அதிகமாகவும், வெள்ளியின் மதிப்பு செம்பைவிட அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வந்தது.

காகித பணம்

சொங் அரசமரபு Jiaozi, உலகின் முதலாவது காகிதப் பணம்

நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், கடனும், அதிகளவு எண்ணிக்கையான செப்பு நாணயங்களைவிடச் சிக்கல்தன்மை குறைந்த பரிமாற்ற ஊடகமாக இருந்தமையும், காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது, எ.கா. வங்கித்தாள். அவற்றின் அறிமுகம், சிறிது சிறிதாக தாங் அரசமரபின் பிற்பகுதியில் இருந்து, (618-907) இருந்து சொங் அரசமரபு (960-1279) வரை நீடித்தது. வணிகர்களின் அதிகளவான உலோக நாணயங்களின் வைப்புத் தொகைக்கு ஈடாக, மொத்த விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தாள்களால் இந்த முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் தாள்கள் ஒரு சிறிய வட்டார பிராந்தியத்தில் தற்காலிக பயன்பாட்டிற்கு செல்லுபடியாகும். 10 ஆம் நூற்றாண்டில், சொங் அரசமரபு அரசாங்கம், அதன் தனிஉரிமை கொண்ட உப்புத் தொழிற்துறையில், வணிகர்களிடையே இத்தகைய தாள்களைப் பரப்பத் தொடங்கியது. சாங் அரசாங்கம் இத்தகைய தாள்களை வெளியிடுவதற்கான உரிமையைப் பல கடைகளுக்கு வழங்கியது. பின்னர், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொங் அரசாங்கம் அந்தக் கடைகளைத் தாமே கையகப்படுத்தி, அரசினால் வெளியிடப்படும் நாணயத்தை உருவாக்கியது. ஆனாலும் இத்தகைய தாள்கள் மட்டும் செல்லுபடியாவதாகவும், தற்காலிகமானதாகவுமே இருந்தன. 13 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே, ஒரு நிலையான மற்றும் சீரான அரசுப் பத்திரமான காகிதப் பணம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க நாணயமாக மாறியது. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏற்கெனவே பரவலான முறையாக இருந்த மரக்குற்றி மூலம் அச்சிடுதலும், அதன் பின்னர் வந்த ஷெங்கின் நகர்தல் வகை அச்சிடுதலும், நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், காகிதப் பணம் மிக அதிகளவில் உற்பத்தியாக உதவின.
அதே வேளை, இடைக்கால இஸ்லாமிய உலகில், 7-12 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு நிலையான உயர் மதிப்பு நாணயத்தின் (தினார்) விரிவாக்க அளவுகளின் அடிப்படையில், ஒரு தீவிரமான பணவியல் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. வைப்பு[4], காசோலை, உறுதிப்படுத்தப்பட்ட காகிதத்தாள்[5], சேமிப்புக் கணக்குகள், பரிவர்த்தனைக் கணக்குகள், அறக்கட்டளை, நாணய மாற்று வீதம், கடனளிப்பு, வைப்பு மற்றும் கடன் பரிமாற்றங்கள்[6], வைப்பு மற்றும் கடனுக்கான வங்கி நிறுவனங்கள் [6] என்பன இஸ்லாமிய பொருளியலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐரோப்பாவில், 1661 ஆம் ஆண்டில் சுவீடனில் ஓர் ஒழுங்கு முறையில் முதலில் காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் வாசிங்டன் இர்விங் என்பவரால், ஸ்பெயினில் முற்றுகையில், கிரேனாடாவை வென்ற போது, முன்னரே காகிதப் பணம் அவசரகாலப் பயன்பாடாகப் பதிவு செய்யப்பட்டிருந்திருக்கிறது. சுவீடனில் செப்பு அதிக அளவில் நிறைந்திருந்ததால், அதன் குறைந்த மதிப்பு அசாதாரணமாக பெரிய நாணயங்களை (பல கிலோ எடையுள்ளவை) உருவாக்கும் தேவையை ஏற்படுத்தியது.

காகித நாணயத்தின் நன்மைகள் ஏராளமாக இருந்தன: தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான தேவை குறைக்கப்பட்டது; தங்கம் அல்லது வெள்ளி கடன்களை வட்டிக்கு வசூலிக்கச் செய்தது, ஏனென்றால் அந்தக் கருவி (தங்கம் அல்லது வெள்ளி) கடன் வாங்கியவரை வேறு ஒருவரிடமிருந்து மீட்டெடுக்காத வரை, அது நாணயத்தின் ஒரு பகுதியை கடன் மற்றும் பிரத்தியேக ஆதரவு வடிவங்களுக்குள் அனுமதித்தது. இது கூட்டு-பங்கு நிறுவனங்களில் பங்கு விற்பனைக்கு உதவியது, மற்றும் காகிதத்தில் அந்த பங்குகளை மீட்டெடுப்பது.

வங்கி நோட்டுகளின் காலம்

ஒரு பணத்தாள் (பொதுவாக அமெரிக்காவில் மற்றும் கனடாவில் உள்ள ஒரு பில் என அழைக்கப்படுகிறது) ஒரு வகை நாணயம், பொதுவாக பல சட்டவாக்கங்களில் சட்ட ஒப்பந்தமாக பயன்படுத்தப்படுகிறது. நாணயங்களுடன், பணத்தாள்களும் பணத்தின் வடிவத்தை உருவாக்குகின்றன. வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் காகிதத்தில் உள்ளன, ஆனால் 1988 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் உலகின் முதலாவது பாலிமர் நாணயத்தை உருவாக்கியது, பாலிமர் நாணயங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது மற்றும் கள்ளப்பணத்தைத் தடுக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாணயம்&oldid=3831819" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை