பதினாறு இராச்சியங்கள்

பதினாறு இராச்சியங்கள் என்பது சீன வரலாற்றில் கி. பி. 304 முதல் கி. பி. 439 வரையான நிலையற்ற காலத்தில் நிறுவப்பட்ட அரசுகளை குறிப்பதாகும். இக்காலத்தில் வட சீனாவின் அரசியல் அமைப்பானது நிலையற்றதாக இருந்தது. தொடர்ச்சியாக சிறிது காலமே நிலைத்திருந்த அரசமரபுகள் நிறுவப்பட்டன. இந்த அரசுகள் பெரும்பாலும் ஐந்து காட்டுமிராண்டிகளால் நிறுவப்பட்டன. இவர்கள் ஆன் சீனர் அல்லாத மக்கள் ஆவர். வட மற்றும் மேற்கு சீனாவிற்கு முந்தைய நூற்றாண்டுகளில் குடிபெயர்ந்தனர். ஆரம்ப 4ஆம் நூற்றாண்டில் மேற்கு சின் அரசமரபு தூக்கியெறிதப்பட்டதில் இவர்கள் பங்கெடுத்தனர்.[1][2]

"பதினாறு இராச்சியங்கள்" என்ற சொற்கள் முதன் முதலில் 6ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் சுயி காங்கால் அவரது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. அவை ஐந்து லியாங்குகள் (முந்தைய, பிந்தைய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), நான்கு யான்கள் (முந்தைய, பிந்தைய, வடக்கு மற்றும் தெற்கு), மூன்று சிங்குகள் (முந்தைய, பிந்தைய மற்றும் மேற்கு), இரண்டு சாவோக்கள் (முந்தைய மற்றும் பிந்தைய), செங் ஆன் மற்றும் சியா.

சீனாவில் மேற்கு சின் அரசமரபின் வீழ்ச்சி மற்றும் காட்டுமிராண்டி அரசுகளின் எழுச்சியானது ஐரோப்பாவில் ஹூனர்கள் மற்றும் செருமானிய பழங்குடியினங்களின் படையெடுப்பு காரணமாக ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததை ஒத்ததாக உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே 4 முதல் 5ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்றன.

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை