பிலிப்பீனியப் புரட்சி
பிலிப்பீனியப் புரட்சி (Philippine Revolution, எசுப்பானிய மொழியில் தகலொக் போர் (Tagalog War)) என்பது பிலிப்பீனிய நாட்டு மக்களுக்கும், எசுப்பானிய காலனித்துவ அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத இராணுவ மோதல் ஆகும். பிலிப்பைன் புரட்சி 1896 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமானது. இப்புரட்சியானது எசுப்பானிய அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட கடிபுனன் (Katipunan) என அழைக்கப்படும் காலனித்துவத்திற்கெதிரான இரகசிய அமைப்பு (anti-colonial secret organization) ஒன்று உருவாக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமானது. கடிபுனன் அந்திரஸ் பொனிபகியோ என்பவரால் தலைமைதாங்கப்பட்டது. எசுப்பானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு இப்புரட்சி ஆரம்பமானது. இவ்வமைப்பானது பல்வேறு பிலிபைசின் மக்களில் தாக்கம் செலுத்தியது. கலகோனில் நடைபெற்ற பெரும் ஒன்றுகூடலின் போது கடிபுனனின் தலைவர்கள் தம்மை ஒரு புரட்சி அரசாக அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன் அவர்கள் ஹம்மை தேசிய ரீதியான இராணுவ புரட்சியாளர்களாகவும் அறிமுகம் செய்தனர்.[2] தலைநகரான மணிலாவில் நடந்த தாக்குதலுக்கு பொனிபசியோ (Bonifacio) என்று பெயர். இத்தாக்குதல் தோல்வியடைந்தது, எனினும் இந்நகரின் அருகிலுள்ள மாகாணங்களில் புரட்சி ஆரம்பமானது.
பிலிப்பீனியப் புரட்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
பினாக்கயன் சண்டை நினைவகம் | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
Katipunan Sovereign Tagalog Nation First Philippine Republic ஆதரவு: United States | Spain | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Andrés Bonifacio | Ramón Blanco Camilo de Polavieja Fernando Primo de Rivera Basilio Augustín Fermin Jáudenes | ||||||
பலம் | |||||||
Zaide, Valenzuela: 30,000; Ponce: 150,000; Pardo de Tavera: 400,000[1][not in citation given] | புரட்சிக்கு முன் 12,700-17,700, 1898 இல் ஏறக்குறைய 55,000 (30,000 எசுப்பானியர்; 25,000 பிலிப்பீனியர்)[1] | ||||||
இழப்புகள் | |||||||
உத்தியோகபூர்வ இழப்பு தெரியாது | உத்தியோகபூர்வ இழப்பு தெரியாது |