மு. இராகவையங்கார்

முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 261960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.

மு. இராகவையங்கார்
பிறப்பு(1878-07-26)26 சூலை 1878
இராமநாதபுரம்
இறப்புபெப்ரவரி 2, 1960(1960-02-02) (அகவை 81)
மானாமதுரை
தேசியம்இந்தியன்
பணிதமிழ்ப் பேராசிரியர்
பணியகம்மதுரைத் தமிழ்ச் சங்கம்
பெற்றோர்முத்துசுவாமி ஐயங்கார்

பிறப்பு

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.

அவைக்களப் புலவர்

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]

தமிழாசிரியர்

பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.

1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.

இதழாசிரியர்

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]

தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்

செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]

பதிப்பாசிரியர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

வ.எண்ஆண்டுநூல்
011910திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
02நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
03சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
04திருக்கலம்பகம் உரையுடன்
05விக்கிரம சோழனுலா
06சந்திரா லோகம்
07கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
081936பெருந்தொகை
091936திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்
101949அரிச்சந்திர வெண்பா
111951கம்பராமாயணம் – பால காண்டம்
121953திரிசிராமலை அந்தாதி
131958கம்பராமாயணம் - சுந்தர காண்டம்

நூல்கள்

மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:

வ. எண்ஆண்டுநூலின் பெயர்பொருள்
011905வேளிர் வரலாறுவரலாறு
021912தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சிதிறனாய்வு
031915சேரன் செங்குட்டுவன்வரலாறு
041924தமிழரும் ஆந்திரரும்ஆராய்ச்சி
051926ஆழ்வார்கள் காலநிலைவரலாறு
061929சாசனத் தமிழ்க்கவி சரிதம்வரலாறு
071938ஆராய்ச்சித் தொகுதிஇலக்கிய ஆராய்ச்சி
081939திருவிடவெந்தை எம்பெருமான்திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம்
091947சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி)இலக்கிய ஆராய்ச்சி
101948செந்தமிழ் வளர்த்த தேவர்கள்வரலாறு
111950Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes
121950இலக்கியக் கட்டுரைகள்இலக்கிய ஆராய்ச்சி
131951சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி)இலக்கிய ஆராய்ச்சி
141958வினைதிரிபு விளக்கம்இலக்கணம்
151959கட்டுரை மணிகள்இலக்கிய ஆராய்ச்சி
161969தெய்வப் புலவர் கம்பர்வரலாறு
17இலக்கிய சாசன வழக்காறுகள்வரலாறு
18நூற்பொருட் குறிப்பகராதி
19நிகண்டகராதி

சொற்பொழிவாளர்

மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:

வ. எண்ஆண்டுதலைப்புஇடம்தலைமை
011929சாசனத் தமிழ்க்கவி சரிதம்சென்னைப் பல்கலைக் கழகம்உ. வே. சாமிநாதையர்
021950காந்தளூர்ச் சாலைதிருவனந்தபுரம் பல்கலைக் கழகம்சர். சி. வி. இராமன்
031950சேரத் தமிழ் இலக்கியங்கள்திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்கோபால மேனன்
041959தெய்வப் புலமைசென்னை மாநிலக் கல்லூரிதெ. பொ. மீனாட்சிசுந்தரம்
05கம்பனின் தெய்வப் புலமைகாரைக்குடி கம்பன் கழகம்சா. கணேசன்

மறைவு

மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.

சான்றடைவு

வெளி இணைப்பு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மு._இராகவையங்கார்&oldid=3394392" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை