விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் தமிழ் இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது. 2010 முதல் அளிக்கப்படுகின்றது. பொதுவாக அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்விருதின் நோக்கம். விருது ரூபாய் ஐம்பதாயிரமும் நினைவுப்பரிசு கேடயமும் அடங்கியது. 2013 முதல் விருதுத்தொகை ஒருலட்சமாக உயர்த்தப்பட்டது. விஷ்ணுபுரம் அமைப்பின் சிற்பமும் பரிசாக அளிக்கப்படுகிறது.
பரிசுபெறும் படைப்பாளியைப் பற்றி ஒரு நூல் பரிசுவிழாவில் வெளியிடப்படுகிறது. பரிசுபெறுபவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்படும். பரிசுபெறும்படைப்பாளியைப்பற்றிய விரிவான இருநாள் கருத்தரங்கும் விவாதங்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் ஒரு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாக்கள் இலக்கியவாசகர்கள் கூடும் கொண்டாட்டங்களாக நிகழ்த்தப்படுகின்றன விழாவிற்கு முதல்நாளே வாசகர்கள் கூடுவார்கள். வாசகர்களும் எழுத்தாளர்களும் வருவார்கள். மூத்த எழுத்தாளர்களுடன் சந்திப்பும் உரையாடலும் தொடர்ச்சியாக நிகழும்
ராஜ்கௌதமன் - பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல் நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.[21]