வோ இங்குயென் கியாப்

வோ கியென் கியாப் (Võ Nguyên Giáp, 25 ஆகத்து 1911 – 4 அக்டோபர் 2013)[1] வியட்னாமைச் சேர்ந்த மக்கள் இராணுவ அதிகாரியும் அரசியல்வாதியும் ஆவார். முதலாம் இந்தோ- சீனப் போரில் இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். முக்கியமான வியட்னாமியப் போர்களிலும் இரண்டாம் உலக்ப் போரிலும் பங்காற்றியுள்ளார்.. இதழாளராகவும், 1946 - 1947 ஆம் ஆண்டுகளில் வியட்னாமின் இராணுவ அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். வியட்னாமிய அரசு முக்கியமான இராணுவ விருதுகளை வழங்கி சிறப்பித்தது.

வோ ஙுவென் கியாப்
Võ Nguyên Giáp
2008 இல் வோ ஙுவென் கியாப்
பட்டப்பெயர்(கள்)ஆன் வான் (சகோதரர் வான்)
பிறப்பு(1911-08-25)25 ஆகத்து 1911
குவாங் பின் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு4 அக்டோபர் 2013(2013-10-04) (அகவை 102)
ஹனோய், வியட்நாம்
சார்புவியட்நாம்
சேவை/கிளைவியட்நாம் மக்கள் இராணுவம்
சேவைக்காலம்1944–1991
தரம்ஜெனரல்
கட்டளை
போர்கள்/யுத்தங்கள்

வாழ்க்கை வரலாறு

வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் வோ கியென் கியாப். ஹனோய் பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூட ஆசிரியர். 'தீன் டாங்' என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகளும் எழுதி வந்தார்.

வியத்நாம் அப்போது பிரெஞ்சு காலனி நாடாக இருந்தது. காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வால், வியத்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காக விதிக்கப்பட்ட 13 மாதச் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலையான பிறகு வியத்நாமிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் இரு பத்திரிகைகளை நடத்தினார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதும் சீனத்துக்குத் தப்பினார் வோ. ஹோ சி மின்னுடன் இணைந்தார். 1944-ல் மீண்டும் வியத்நாமுக்கு வந்தார்.[2]

ராணுவ தளபதி

1954-ல் தீன் பீன் பு என்ற இடத்தில் தாக்குதல் நடத்தி பிரெஞ்சு ராணுவம் வீழ்த்த்ப்பட்ட பிறகு வியத்நாமுக்குச் சுதந்திரம் கிடைத்தது. பிறகு தெற்கு வியத்நாமில் அமெரிக்க ஆதரவில் நடைபெற்ற அரசையும், 1975 ஏப்ரலில் வோ கியான் கியாப் தலைமையிலான 'மக்கள் சேனை' போரில் வென்றது.

வியத்நாம் விடுதலைப் போர் நடந்த காலங்களில் பெரும்பாலும் ராணுவ அமைச்சராக 'வோ'தான் பதவி வகித்தார். அவரே ராணுவத் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

1979-ல் அவரிடமிருந்து ராணுவத் துறை பறிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் தலைமைக் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். 1991-ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அவராகவே விலகிக் கொண்டார்.

[2]

102-வது வயதில் இறப்பு

முதுமை, உடல் நலிவு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒடுங்கிவந்த வோ தன்னுடைய 102-வது வயதில் ஹனோய் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அக்டோபர் 4, 2013 அன்று மரணம் அடைந்தார்.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை