2017 அரியானா கலவரம்
2017 அரியானா கலவரம் என்பது 25 ஆகத்து 2017 அன்று இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா நகரத்தில் தொடங்கிய வன்முறைகளைக் குறிக்கும். இக்கலவரம் அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் நாட்டின் தலைநகர் புது தில்லிக்கும் பரவியது.[1] இந்த வன்முறைச் செயல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் காயமடைந்தனர்.[2]
2017 அரியானா கலவரம் | |
---|---|
தேதி | 25 ஆகத்து 2017 |
அமைவிடம் | |
காரணம் | குர்மீத் ராம் ரகீம் சிங் என்பவர் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் |
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 36 |
காயமுற்றோர் | 250+ |
கைதானோர் | 3 |
காவலில் இருத்தி வைக்கப்பட்டோர் | 1000 |
வன்முறைகள்
பஞ்சாப்பிலுள்ள மாலவுட், பல்லுவானா ஆகிய இரு தொடருந்து நிலையங்கள் தீவைப்புக்கு உள்ளாகின. டெல்லியிலுள்ள ஆனந்த் விகார் தொடருந்து நிலையத்தில் ரெவா விரைவுத் தொடருந்தின் காலியான இரண்டு பெட்டிகள் தீ வைக்கப்பட்டன.[3] என்டிடிவி செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் தாக்கப்பட்டதில், ஒளிபரப்புப் பொறியாளர் காயமடைந்தார். சிர்சா நகரில், இந்தியா டுடே செய்தித் தொலைக்காட்சியின் குழு தாக்கப்பட்டதில் ஒளிப்படக்காரர் காயமடைந்தார். பஞ்சாப்பின் மன்சா நகரில், காவற்துறை வாகனங்கள் 2 கொளுத்தப்பட்டன.[4]