ஆரி முலிச்
ஆரி முலிச் (Harry Kurt Victor Mulisch, ஹாரி குர்ட் விக்டர் முலிஷ், சூலை 29, 1927 – அக்டோபர் 30, 2010[1]) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற டச்சு எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகளை எழுதியுள்ளார்[1]. இவை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2].
ஆரி முலிச் | |
---|---|
பிறப்பு | ஹார்லெம், நெதர்லாந்து | சூலை 29, 1927
இறப்பு | அக்டோபர் 30, 2010 ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து | (அகவை 83)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | டச்சுக்காரர் |
வகை | புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த அஸ்ஸால்ட், [த டிஸ்கவரி ஆஃப் ஹெவன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பட்டியல் |
இணையதளம் | |
http://www.mulisch.nl |
போருக்குப் பிந்தைய டச்சு இலக்கியத்தில் வில்லெம் பிரடெரிக் ஹெர்மன்ஸ், கெரார்ட் ரேவ் ஆகியாருடன் "தலைசிறந்த மூவர்" எனக் கருதப்படுகிறார். அவருடைய புதினம் த அஸ்ஸால்ட் ஓர் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோல்டன் குளோப், ஆசுகார் விருதுகளைப் பெற்றது.[3] 2007 வாக்கெடுப்பொன்றில் அவரது 1992 புதினம் த டிஸ்கவரி ஆஃப் ஹெவன், "என்றைக்குமான மிகச் சிறந்த டச்சு புத்தகம்". என தெரிவு செய்யப்பட்டது.[4] நோபல் பரிசு பெறக்கூடியவராக கருதப்பட்டார்.[4]
முலிச்சின் கண்கண்ணாடிகளும் புகைக்குழலும் மிகவும் அறியப்பட்டவை.[4]