ஒராங் தேசிய பூங்கா

The ஒராங் தேசிய பூங்கா (Orang National Park) என்பது இந்தியாவின் அசாமின் தர்ரங் மற்றும் சோணித்பூர் மாவட்டங்களில் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சரணாலயம் ஆகும். இது 78.81 km2 (30.43 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டில் சரணாலயமாகத் தோற்றுவிக்கப்பட்டு ஏப்ரல் 13, 1999 அன்று தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்திய மூக்குக்கொம்பன், குள்ள காடுப் பன்றி, ஆசிய யானை, காட்டு நீர் எருமை மற்றும் வங்காள புலி உள்ளிட்ட விலங்குகளும் தாவரங்களும் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இது பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள காண்டாமிருகத்தின் ஒரே வாழிடப்பகுதியாகும்.

ஒராங் தேசிய பூங்கா
Orang National Park
அசாம், ஒராங் தேசிய பூங்காவில் ஒற்றை இந்திய மூக்குக்கொம்பன்
Map showing the location of ஒராங் தேசிய பூங்கா Orang National Park
Map showing the location of ஒராங் தேசிய பூங்கா Orang National Park
அமைவிடம்உதல்குரி மாவட்டம் & சோணித்பூர் மாவட்டம், அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°33′25″N 92°19′40″E / 26.5568148°N 92.3279016°E / 26.5568148; 92.3279016
பரப்பளவு78.81 km2 (30.43 sq mi)
நிறுவப்பட்டது1985
நிருவாக அமைப்புஇந்திய அரசு, அசாம் மாநில அரசு

வரலாறு

இந்த பூங்காவில் வசிப்பிடத்தின் வரலாறு பழமையானது. 1900 வரை இப்பகுதியில் உள்ளூர் பழங்குடியினர் வசித்து வந்தனர். ஒரு தொற்றுநோய் காரணமாக, பழங்குடி மக்கள் இப்பகுதியைக் கைவிட்டுச் சென்றனர். இருப்பினும், 1919ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் மே 31, 1915 தேதியிட்ட ஒராங் கேம் ரிசர்வ் என அறிக்கை எண் 2276 /ஆர் மூலம் அறிவித்தது. புலிகள் பாதுகாப்புத் திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்பகுதி மாநில வனத்துறையின் வனவிலங்கு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இது 1985ஆம் ஆண்டில் ஒரு வனவிலங்கு சரணாலயமாக நிறுவப்பட்டது. 20 செப்டம்பர் 1985 தேதியிட்ட FRS 133/85/5 என்ற அறிவிப்பின் மூலம். ஆனால் 1992 ஆம் ஆண்டில், இந்த பூங்கா ராஜீவ்காந்தி வனவிலங்கு சரணாலயம் என மறுபெயரிடப்பட்டது. ஆனால் பெயர் மாற்றத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெயர் மாற்றம் மாற்றப்பட வேண்டியிருந்தது. இறுதியாக, இச்சரணாலயம் ஓராங் தேசிய பூங்காவாக 1999இல் 13 ஏப்ரல் 1999 தேதியிட்ட FRW / 28/90/154 என்ற அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது.[1]

நிலவியல்

78.81 சதுர கிலோமீட்டர்கள் (30.43 sq mi) உள்ளடக்கிய ஒராங் தேசிய பூங்கா, பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 26°28′59″N 92°15′58″E / 26.483°N 92.266°E / 26.483; 92.266 மற்றும் 26°39′58″N 92°27′00″E / 26.666°N 92.45°E / 26.666; 92.45 தாரங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களுக்குள் அமைந்துள்ளது. பச்னோய் நதி, பெல்சிரி நதி மற்றும் தன்ஷிரி நதி ஆகியவை பூங்காவை எல்லையாகக் கொண்டு பிரம்மபுத்ரா நதியில் இணைகின்றன. இந்நதிகளால் மழைக்காலங்களில், பூங்கா வெள்ள சமவெளியாக மாறுகிறது. இந்த வெள்ள சமவெளிகள் பூங்காவில் பன்னிரண்டு ஈரநிலங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட 26 நீர்நிலைகளும் உள்ளன.

இந்த பூங்கா பல நதிகளின் வண்டல் வெள்ள சமவெளிகளால் உருவாக்கப்பட்டது. இது இந்தோ-பர்மா பல்லுயிர் செறிவிடமாம். பூங்காவின் மொத்த பரப்பளவு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது: கிழக்கு இமயமலை ஈரமான இலையுதிர் காடு - 15.85 சதுர கிலோமீட்டர்கள் (6.12 sq mi) ; கிழக்கு பருவகால சதுப்புநில காடு - 3.28 சதுர கிலோமீட்டர்கள் (1.27 sq mi), கிழக்கு ஈரமான வண்டல் புல்வெளி - 8.33 சதுர கிலோமீட்டர்கள் (3.22 sq mi), புன்னிலம் புல்வெளி - 18.17 சதுர கிலோமீட்டர்கள் (7.02 sq mi), சீரழிந்த புல்வெளி - 10.36 சதுர கிலோமீட்டர்கள் (4.00 sq mi), நீர் உடல்- 6.13 சதுர கிலோமீட்டர்கள் (2.37 sq mi), ஈரமான சாண்டி பகுதி- 2.66 சதுர கிலோமீட்டர்கள் (1.03 sq mi) மற்றும் உலர் சாண்டி பகுதி - 4.02 சதுர கிலோமீட்டர்கள் (1.55 sq mi) . வடக்கிலிருந்து தெற்கே மென்மையான சாய்வுடன் தட்டையான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பூங்காவில் உயரம் 45 மீட்டர்கள் (148 அடி) முதல் 70 மீட்டர்கள் (230 அடி) . இது அதன் தெற்கு மற்றும் கிழக்கில் தீவுகள் மற்றும் ஆற்றின் கசிவு வாய்க்கால்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால் தட்டையான வண்டல் நிலம் இரண்டு பகுதிகளாகத் தெளிவாகக் காணப்படுகிறது; கீழ் வறண்ட நிலம் பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் அண்மையில் தோன்றியது, மற்றொன்று வடக்கே மேல் நிலவ்ழி, பூங்கா வழியாகச் செல்லும் உயர் கரையால் பிரிக்கப்பட்டுள்ளது. பூங்காவினைச் சுற்றிலும் கிராமங்கள் உள்ளன. இதனால் இப்பூங்கா உயிரியல் அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதன் மேற்கில் கிராமவாசிகள் கட்டிய நரி ஓட்டைகள் உள்ளன.

காலநிலை

பூங்காவின் காலநிலை கோடை, பருவமழை மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று பருவங்களை உள்ளடக்கியது. இந்த பூங்கா வெப்பமண்டல பருவமழை காலநிலைக்கு உட்பட்டது. மே முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மழை பொழிகின்றது. சராசரி ஆண்டு மழையளவு 3,000 மில்லிமீட்டர்கள் (120 அங்) ஆகும்.[2]

இந்த பூங்காவில் பதிவான வெப்பநிலை பின்வருமாறு குறிப்பிடுகின்றன: அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் குளிர்காலமாகும். இக்காலத்தில் 5–15 °C (41–59 °F) வெப்ப நிலைக் காலை வேளையிலும் 20–25 °C (68–77 °F) பிற்பகல் பொழுதிலும், ஏப்ரல் மாதத்தில் இது காலையில் 12–25 °C (54–77 °F) செல்சியசாகவும் பிற்பகலில் 25–30 °C (77–86 °F) வரையும்; மே மற்றும் ஜூன் கோடைக் காலம், காலையில் 20–28 °C (68–82 °F) எனவும் பிற்பகலில் 30–32 °C (86–90 °F) பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

பூங்காவில் ஈரப்பதம் 66% முதல் 95% வரை மாறுபடும்.

விலங்குகள்

யானை, காண்டாமிருகம் மற்றும் பன்றி (போர்குலா சால்வேனியா ) (சிறிய காட்டு பன்றியின் அருகிய இனங்கள்)

ஒராங் பூங்காவில் பல பாலூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இந்த தேசிய பூங்காவின் ஆதிக்கம் செலுத்தும் இனமாக இந்திய மூக்குக்கொம்பன் (கடைசி எண்ணிக்கையில் 68) உள்ளது. இதைத் தவிர, வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற முக்கிய இனங்கள் வங்காளப் புலி (பாந்தெரா டைக்ரிசு ), ஆசிய யானை, குள்ள காட்டுப் பன்றி, குறைக்கும் மான் மற்றும் காட்டுப்பன்றி முதலியன.[3][4]

குள்ளக் காட்டுப் பன்றி, சிறிய பன்றி, அருகிய இனமாக உள்ளது. இவை ஐ.யூ.சி.என் பட்டியலின் படி சி 2 ஏ (ii) வெர் 3.1, மற்றும் இப்பகுதியில் உள்ள சுமார் 75 விலங்குகளுக்கு மட்டுமே இது வரையறுக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு அசாமில் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ளது. ஓராங் தேசியப் பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இனமாக உள்ளது. குறிப்பிடப்பட்ட பிற பாலூட்டிகள்: கங்கை டால்பின், இந்திய எறும்புண்ணி, குரைக்கும் மான் (ஆக்சிஸ் porcinus), செம்முகக் குரங்கு வங்காள முள்ளம்பன்றி, இந்திய நரி, சிறு இந்தியப் புனுகுப்பூனை, நீர்நாய், சிறுத்தை பூனை (ப்பிரிஓநெய்லுரசு பெங்காளிசிசு), மீன்பிடிப்பு பூனை (ப்பிரிஓநெய்லுரசு விவெர்ரிநசு) மற்றும் காட்டுப் பூனை (பெலிசு சாசு).[3]

வங்காளப் புலி (பாந்தெரா டைக்ரிஸ் டைக்ரிசு ) எண்ணிக்கை மதிப்புகளின் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டில் 19 ஆக இருந்தது.

2006ஆம் ஆண்டில் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மூக்குக்கொம்பன் (ரைனோசெராசு யூனிகார்னிசு) 68ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மீன்கள்

இந்தப் பூங்காவின் வழியாக ஓடும் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளதாகப் பதிவாகியுள்ளன.

பறவை விலங்கினங்கள்

வங்காள புளோரிகன், பூங்காவில் பாதுகாக்கப்படும் அச்சுறுத்தப்பட்ட இனம்

இந்த பூங்கா பலவிதமான வலசைப்போகும் பறவைகள், நீர்ப் பறவைகள், வேட்டையாடும் பறவைகள், மற்றும் விளையாட்டு பறவைகளின் புகலிடமாக உள்ளது. 47 குடும்பங்கள் அனாடிடாய், பாறுக் குடும்பம், மற்றும் அராடேயா உள்ளிட்ட 47 குடும்பங்களைச் சார்ந்த 222 வகையான பறவைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில: புள்ளி அலகு நாரை (பெலிகனசு பிலிப்பென்சிசு), பெரிய வெள்ளை நாரை, கறுப்பு-கழுத்து நாரை (எப்பிப்பியோர்ஹைஞ்சசு ஆசியட்டிகசு ), பெருநாரை (லெப்டோப்டிலோசு டூபியசு ), சிறுத்த பெருநாரை (லெப்டோபிலோசு ஜாவானிகசு), சிவப்புத்தாரா (தடோர்னா பெருஜினியே), கருவால் வாத்து (அனசு செட்ரிபெரா), காடு வாத்து (அனசு பிளாட்டிரைங்கோசு), ஊசிவால் வாத்து (அனசு அக்குடா), இருவாய்ச்சி, அதீனா மீன் கழுகு (ஹேலியேடசு லுகோரைபசு), மீன் கொத்தி மற்றும் மரங்கொத்தி. ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட பட்டியலில் உள்ள வங்காள புளோரிகன் (ஹூபரோப்சிசு பெங்கலென்சிசு ) 30 முதல் 40 வரை இந்தப் பூங்காவில் காணப்படும் முக்கிய உயிரினங்களில் ஒன்றாகும் (பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் (பி.என்.எச்.எஸ்) படி இரண்டாவது மிக உயர்ந்த செறிவு இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது).[5][3][4][6] அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் பறவைகளான பால் அமெரிக்க வெள்ளை பெலிகன்களும் இந்த பூங்காவில் பதிவாகியுள்ளன.

ஊர்வன

ஊர்வனவற்றில் ஏழு இனங்கள் காணப்படுகின்றன. இவை ஆமை மற்றும் நிலஆமை வகையினைச் சார்ந்தவை. லிசெமைசு பன்க்டேட்டா, கச்சுகா டெக்டா ஆமைகள் பொதுவாகக் காணக்கூடியவை. பாம்புகளில், மலைப்பாம்புகள் மற்றும் நாகப்பாம்புகள் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மலைப்பாம்பு, கருப்பு கிரெய்ட், இராச நாகம், நாகம், உடும்பு ஆகியவை இங்குக் காணப்படும் ஊர்வன.[3][4]

தாவரங்கள்

இந்த பூங்காவில் காடுகள், இயற்கை காடுகள், நீர் வாழ் புல்/தாவரங்கள் நிறைந்து காணப்படுகிறது. கோங்கு, சிசே மரம், செடர்குலா வில்லோசா, திரிவியா நுடிபுளோரா, இலந்தை, மற்றும் லிட்சாயேபோலியந்தா காணப்படுகின்றன. நீரில் வாழாப் புல்வெளி இனங்களில் முக்கியமானவை பிராக்மிட்சு கர்கா, எருவை (புல்) (அருண்டோ டோனாக்ஸ்), இம்பெரெட்டா சிலிண்ட்ரிகா மற்றும் கரும்பு சிற்றினம் காணப்படுகின்றன. நீர்வாழ்வனவாக ஆண்ட்ரோபோகன் சிற்றினம், இப்போமியா ரெப்டான்சு , என்ஹைட்ரா பிளக்டுஅன்சு, நிம்பேயா சிற்றினம் மற்றும் நீர் பதுமராகம் (ஆகாயத்தாமரை).[2][5][3]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு

வேட்டை, ஒரு பண்டைய விளையாட்டு - பாபர் நாமாவில் மூக்குக் கொம்பன் வேட்டை ஓவியம்

1991 முதல், கடுமையான மனிதர்களினால் அழுத்தம் (அண்டை நாட்டிலிருந்து குடியேறியவர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு) மற்றும் கிளர்ச்சி காரணமாகப் பூங்கா மற்றும் அதன் காட்டு விலங்குகளின் உயிர்வாழ்லுக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டது. வேட்டையாடுதல் முக்கிய அச்சுறுத்தலாக கண்டறியப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் பாதுகாப்பிற்கான போதிய மனித சக்தி, பரந்த நதி வழித்தடங்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாமை, சமூகப் பாதுகாப்பில் பங்கேற்பு குறைவு உள்ளிட்ட காரணிகள் அச்சுறுத்தல்களாக அடையாளம் காணப்பட்டன. காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாகப் பெரிய இந்திய மூக்குக்கொம்பனின் எண்ணிக்கை 1991இல் 97 இருந்தது, இது 48ஆக குறைந்தது. வேட்டையாடுதலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், 2006-07 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது. ஆனால் காண்டாமிருகங்களை வேட்டையாடுவது மற்றும் கொல்வது இன்றும் தொடர்கிறது. இந்த தொடர்ச்சியான வேட்டையாடலைத் தவிர்க்க அசாம் வனத்துறை அதிகாரிகள் மரிகாவன் மாவட்டம், டாரங், சோனித்பூர் உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஒரு "ஒருங்கிணைப்புக் குழுவினை" அமைத்தனர். உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வள சங்கத்தின் (WAZA) முயற்சியின் கீழ், இந்தியக் காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கும் பூங்காவின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கான பாதுகாப்புக்காக ஒராங் தேசிய பூங்கா அடையாளம் காணப்பட்டது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம், இந்தியா அசாம் அரசு மற்றும் சர்வதேச ரைனோ அறக்கட்டளை (ஐஆர்எஃப்), பேசெல் விலங்குக் காட்சியகம் ஆதரவுடன் (சுவிட்சர்லாந்து) மற்றும் ஐஆர்வி 2020 ஆகியவை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.[5][7][8][9] இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மற்றும் இந்திய அரசு, "ரைனோ விஷன் இந்தியா (ஆர்விஐ)" என்ற திட்டத்தின் கீழ், காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை 2020ஆம் ஆண்டில் 300 ஆக உயர்த்தவும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த பூங்காவில் உள்ள வங்காள புலிகளும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வள சங்கம் மற்றும் புஷ் கார்டன்ஸ் நிதியுதவியுடன் சிற்றின வாழ்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிர்வகிக்கப்பட்டும் விலங்குகளின் மரபணு வேறுபாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் அசாம், ஒராங் தேசிய பூங்காவில் “காட்டுப் புலிகளைச் சுற்றுச்சூழலில் கண்காணிப்பு” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு சார்பற்ற அமைப்பான ஆரண்யக் உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியுடன், பூங்காவில் புலிகளின் அடர்த்தியைக் கண்காணிக்க உள்ளூர் ஆராய்ச்சியாளர்களால் கேமரா பொறிகளுடன் புவி-இடஞ்சார்ந்த தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளது. மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலை நிர்வகிக்கவும், தணிக்கவும், தடுக்கவும் உதவும் சமூக பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.[10]

பார்வையாளர் தகவல்

அசாமில் அருகிலுள்ள நகரங்களுடன் சாலை மூலமாகவும், தொடருந்து, மற்றும் விமான இணைப்புகள் மூலம் இந்த பூங்கா நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகரம் தேஜ்பூர் ஆகும். இது 32 கிலோமீட்டர்கள் (20 mi) தொலைவில் உள்ளது. பூங்காவிலிருந்து குவகாத்தி சுமார் 140 கிலோமீட்டர்கள் (87 mi) தூரத்தில் உள்ளது.[3][4]

இது தேசிய நெடுஞ்சாலை 52லிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓராங் நகரத்திற்கு (தன்சிரிமுக்) அருகில் உள்ளது. ஓராங் இதன் அருகிலுள்ள கிராமமாகும். மேலும் 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவில். தன்சிரிமுக் கிராம் உள்ளது. இது குவகாத்தியிலிருந்து 127 கிலோமீட்டர்கள் (79 mi) தொலைவில் உள்ளது.[2][4]

அருகிலுள்ள தொடருந்து நிலையம் சலோனிபரி. இது 41 கிலோமீட்டர்கள் (25 mi) ) தொலைவில் அமைந்துள்ளது. தேஜ்பூர் மற்றும் குவகாத்தி இரு நகரங்களும் இந்தியாவின் இரயில் சேவைமூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன.[3]

அருகிலுள்ள விமான நிலையம் தேஜ்பூரிலிருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் உள்ள சலோனிபரி.இது இப்பூங்காவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் (சோனித்பூர் மாவட்டத்தில்) குவகாத்தியிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை பூங்காவைப் பார்வையிடச் சிறந்த காலமாகும். பார்வை நேரம் காலை 07: 30 முதல் 09:30 மற்றும் பிற்பகல் 02:00-3: 00 வரை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நேர இடைவெளியில் பூங்கா வாயில் மூடப்பட்டிருக்கும். பூங்காவைப் பார்வையிட மங்கல் தோய் பிரதேச வன அலுவலரின் அனுமதியினை முன்கூட்டியே பெறுதல் அவசியமாகும்.[11]

கேலரி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒராங்_தேசிய_பூங்கா&oldid=3800003" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்