சென்னை மாவட்டம்
சென்னை | |
மாவட்டம் | |
மெரீனா கடற்கரை | |
ரிப்பன் கட்டிடம் | |
சென்னை மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | சென்னை |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் | திருமதி. மு. அருணா, இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் | - |
மாநகராட்சி | 1 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 16 |
வருவாய் கிராமங்கள் | 122 |
மண்டலம் | 15 |
வார்டு | 200 |
சட்டமன்றத் தொகுதிகள் | 16 |
மக்களவைத் தொகுதிகள் | 3 |
பரப்பளவு | 178 ச.கி.மீ. |
மக்கள் தொகை | 46,46,732 (2011) |
அலுவல் மொழி(கள்) | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 600 xxx |
தொலைபேசிக் குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-01யிலிருந்து - TN-14 வரை |
பாலின விகிதம் | 989 பெண் / 1000 ஆண் ♂/♀ |
கல்வியறிவு | 90.18% |
இணையதளம் | chennai |
சென்னை மாவட்டம் (Chennai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில்தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் ஆகும்.
178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018-இல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ. ஆகக் கூடியுள்ளது.[1][2]
புவியியல்
சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், வங்காள விரிகுடா கடற்கரையோர சமவெளியில், 178 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80°12' மற்றும் 80°19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாயக் குறிப்பு, மிதமான அபாயத்தைக் குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கி.மீ.) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன. அவை, கூவம் மற்றும் அடையாறு ஆகும்.
மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் சென்னை ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே, விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04% ஆகப் பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 37,941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி, சென்னை 0.842 பெற்று, முதல் இடத்தில் உள்ளது.[3].
மக்கள்தொகை பரம்பல்
தமிழக மாவட்டங்களிலேயே, பரப்பளவில் சிறியதும், மக்கள்தொகை மிக்கவும் உள்ள மாவட்டம் இதுவே ஆகும். 178 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 4,646,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும், பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்ப்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.[4]
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 37,51,322(80.73%) ஆகவும், இசுலாமியர்கள் 4,39,270 (9.45%)ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், சமணர்கள் 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆட்சியர் அலுவலகம்
வரலாறு
சென்னை நகரமானது, 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, மற்றும் 1772 இல் சென்னையானது, பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது.சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் லார்டு பென்டிங் பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த, சிங்காரவேலர் பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிங்காரவேலர் மாளிகை,
62, ராஜாஜி சாலை,
சென்னை - 600 001.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
- விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 49 குறுவட்டங்களும், 125 வருவாய் கிராமங்களும் கொண்டது.[5][6] மேலும் இம்மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.[7]
சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி அமைப்பு
சென்னை மாவட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.[8]
கல்வி நிலையங்கள்
தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 170 சதுர கி.மீ. பரப்புள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதி, தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கி வருகின்றது. சென்னையில், பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் போன்றவை உள்ளன.
வழிபாட்டுத் தலங்கள்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
- வடபழநி முருகன் கோவில்
- திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
- செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்[9]
- சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில்
- ஆயிரம்விளக்கு மசூதி
- சென்னை சாந்தோம் பேராலயம்
- பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம்
- பெசன்ட் நகர் அட்டலட்சுமி திருக்கோவில்.
மருத்துவமனை மற்றும் கல்லூரி
பெயர் | முகவரி |
---|---|
சென்னை அரசுப் பொது மருத்துவமனை | சென்னை-600003 |
ஸ்டான்லி மருத்துவமனை | பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001 |
ராயப்பேட்டை மருத்துவமனை | 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014 |
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி | சென்னை-600010 |
சித்தா மருத்துவ கல்லூரி | அண்ணாநகர், சென்னை-600106 |
அரசியல்
சென்னை மாவட்டம், வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.[10]
மக்களவை உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
17வது மக்களவைத் தொகுதி(2019-2024) | |||
2 | வடசென்னை | திரு.கலாநிதி வீராசாமி | (திமுக) |
3 | தென்சென்னை | திரு.தமிழச்சி தங்கபாண்டியன் | (திமுக) |
4 | மத்தியசென்னை | திரு.தயாநிதி மாறன் | (திமுக) |
சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) | |||
11 | ராதாகிருஷ்ணன் நகர் | திரு.ஜெ.ஜெ.எபினேசர் | (திமுக) |
12 | பெரம்பூர் | திரு.ஆர்.டி.சேகர் | (திமுக) |
13 | கொளத்தூர் | திரு.மு.க.ஸ்டாலின் | (திமுக) |
14 | வில்லிவாக்கம் | திரு.அ.வெற்றியழகன் | (திமுக) |
15 | திரு.வி.க.நகர் | திரு.பி.வி.சிவக்குமார் (எ) தாயகம் கவி | (திமுக) |
16 | எழும்பூர் | திரு.ஐ.பரந்தாமன் | (திமுக) |
17 | இராயபுரம் | திரு.ஐட்ரீம்.இரா.மூர்த்தி | (திமுக) |
18 | துறைமுகம் | திரு.சேகர்பாபு | (திமுக) |
19 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | திரு.உதயநிதிஸ்டாலின் | (திமுக) |
20 | ஆயிரம் விளக்கு | திரு.எழிலன் நாகநாதன் | (திமுக) |
21 | அண்ணா நகர் | திரு.எம்.கே.மோகன் | (திமுக) |
22 | விருகம்பாக்கம் | திரு.ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா | (திமுக) |
23 | சைதாப்பேட்டை | திரு.மா.சுப்பிரமணியன் | (திமுக) |
24 | தி.நகர் | திரு.ஜெ.கருணாநிதி | (திமுக) |
25 | மயிலாப்பூர் | திரு.த.வேலு | (திமுக) |
26 | வேளச்சேரி | திரு.ஜே.எம்.எச்.அசன் மௌலானா | (திமுக) |