சேரர்

சேரர் எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூறம். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.[1]

சேர நாடு
பொ.ஊ.மு. 500–பொ.ஊ. 1102
கொடி of சேரர்
கொடி
தலைநகரம்வஞ்சி மற்றும் கரூர்
பேசப்படும் மொழிகள்தமிழ், மலையாளம்
சமயம்
வைணவம், சைவ சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்சங்க காலம், மத்திய காலம்
• தொடக்கம்
பொ.ஊ.மு. 500
• இரண்டாம் சேரர்கள்.
பொ.ஊ. 800
• முடிவு
பொ.ஊ. 1102
பின்னையது
}
சோழர்
தற்போதைய பகுதிகள் இந்தியா
சங்ககாலச் சேரர் ஆட்சி
சேர மன்னர்களின் பட்டியல்
கடைச்சங்க காலச் சேரர்கள்
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்பொ.ஊ. 45-70[சான்று தேவை]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பொ.ஊ. 71-129[சான்று தேவை]
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்பொ.ஊ. 80-105[சான்று தேவை]
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்பொ.ஊ. 106-130[சான்று தேவை]
சேரன் செங்குட்டுவன்பொ.ஊ. 129-184[சான்று தேவை]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்பொ.ஊ. 130-167[சான்று தேவை]
அந்துவஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
வாழியாதன் இரும்பொறைபொ.ஊ. 123-148[சான்று தேவை]
குட்டுவன் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
பெருஞ்சேரல் இரும்பொறைபொ.ஊ. 148-165[சான்று தேவை]
இளஞ்சேரல் இரும்பொறைபொ.ஊ. 165-180[சான்று தேவை]
பெருஞ்சேரலாதன்பொ.ஊ. 180[சான்று தேவை]
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
குட்டுவன் கோதைபொ.ஊ. 184-194[சான்று தேவை]
மாரிவெண்கோகாலம் தெரியவில்லை
வஞ்சன்காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோகாலம் தெரியவில்லை
கணைக்கால் இரும்பொறைகாலம் தெரியவில்லை
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைகாலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள்
பெருமாள் பாசுகர ரவிவர்மாபொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு
edit

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.[1]

கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கருநாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.[2]

இருப்பிடம்

இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.[3]

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சங்ககாலச் சேரர்கள்

சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சேர வேந்தனின் பெயர்தந்தை பெயர்தலைநகரம்ஆட்சி செய்த காலம்ஆட்சியாண்டுகள்[4][5]
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்25 ஆண்டுகள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்25 ஆண்டுகள்
சேரன் செங்குட்டுவன்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)55 ஆண்டுகள்
சேரமான் பெருஞ்சேரலாதன்பொ.ஊ.மு. 145[6]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்நறவூர்38 ஆண்டுகள்
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை[7]
சேரமான் கோக்கோதை மார்பன்[8]
குட்டுவன் கோதை[9]
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர்
செல்வக் கடுங்கோ வாழியாதன்சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர்25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைசெல்வக் கடுங்கோ வாழியாதன்பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்[10]17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறைதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைகருவூர்[11]16 ஆண்டுகள்
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைசேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர், மாந்தைபொ.ஊ. 141[12][13][14]
சேரமான் மாரிவெண்கோ[15]
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறைகருவூர்
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைகருவூர்
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்கருவூர்(பொருநை நதி பாயும் வஞ்சி)
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
கோதை மார்பன்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரமான் வஞ்சன்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

பிற்காலச் சேரர்கள்

  • சேரமான் மாக்கோதையார் (பொ.ஊ. 598-629)
  • சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756)
  • சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800)
  • குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820)
  • இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844)
  • சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885)
  • இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917)
  • கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944)
  • இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962)
  • பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019)
  • பாசுகரா ரவி வர்மன் II (பொ.ஊ. 1019-1021)
  • வீர கேரளா (பொ.ஊ. 1021-1028)
  • இராசசிம்மா (பொ.ஊ. 1028-1043)
  • பாசுகரா ரவி வர்மன் III (பொ.ஊ. 1043-1082)
  • ரவி ராம வர்மா (பொ.ஊ. 1082-1090)
  • ராம வர்மா குலசேகர (பொ.ஊ. 1090-1102)
மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்

படைபலம்

- பாவாணர்[16]

நகரங்கள்

கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை நகர்களாக விளங்கியன. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்[1]. தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்

சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:[2]

-சாமந்தம் பெயர்தலைநகர் பெயர்
1ஏரநாடுகோழிக்கோடு
2வேணாடுபத்மநாபபுரம்
3ஓனாடுகாயங்குளம்
4கோனாடு--
5கொடுக்குன்னி நாடு--
6கோலத்து நாடுவழப்பட்டிணம்
7போல நாடு--
8வேம்பொலி நாடு (தெக்கன் கூறு, வடக்கன் கூறு)செங்கனச்சேரி

12 (சுதந்திர நாடு) பிரிவுகள்

சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:[2]

-விடுதலை நாடுகள்தற்போதைய பகுதி
1நெடியிருப்புகோழிக்கோடு
2ஆரங்கோடுவள்ளுவநாடு
3பெரும்படப்புகொச்சி
4திருப்பாப்பூர்திருவிதாங்கூர்
5குறும்பியாதிரிகுறும்ப நாடு
6புறநாட்டுக்கரைகோட்டையம்
7கோளத்திரிசிரக்கல்
8போர்ளாத்திரிகடத்த நாடு
9தரூர்பாலக்காடு
10பாப்புக்கோயில்பெய்ப்பூர்
11பரப்புக்கோயில்பரப்ப நாடு
12ஒன்றில்பரப்ப நாட்டின் ஒருபகுதி

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.[3]

நதிகள்

இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.[17]

வேளாண்மை

இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.

கருவி நூல்

மேலும் காண்க

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேரர்&oldid=3866560" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை